Ad Widget

வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

மேற்குறித்த வழக்கு நேற்றய தினம் செவ்வாய்க்கிழமை(9) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த மாணவியின் கொலை தொடர்பிலான விசாரணை குறித்து நீதிவானுக்கு மன்றில் ஆஜராகிய குற்றப்புலனாய்வு அதிகாரி விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நேற்றய விசாரணைக்கு மாணவி வித்தியாவின் தாயார் வருகை தந்திருந்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழமையாக நீதிமன்றத்திற்கு வருகை தரும் உறவினர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. மனுதாரர் சார்பாக சட்டத்தரணி ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார்.

Related Posts