யாழ்.பல்கலைகழக மாணவனின் உடலம் கிளிநொச்சியில் அஞ்சலிகாக வைக்கப்பட்டுள்ளது

பொலிசாரின் துப்பாக்கி சூட்டின் போது, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் யாழ்.பல்கலைகழக 3ஆம் வருட மாணவன் நடராசா கஜனின் உடலம் தற்போது கிளிநொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர் குறித்த இளைஞனின் கொலையால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிகரெட் ஒன்று 55 ரூபாவாகும்: சுகாதார அமைச்சர்

சிகரெட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்பொழுது அமைச்சரவையினால் ஒரு சிகரெட்டின் விலை 7 ரூபாவினால் உயத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து எதிர்வரும் நாட்களில் ஒரு சிகரெட்டின் விலை 15 வீத வரியினால் அதிகரிக்கப்படும். தற்பொழுது சிகரெட் ஒன்று 42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பீடி, சுருட்டு...
Ad Widget

துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? மனோ

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ் மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்ட...

பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டால் இரண்டு அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளமை பெரும் கவலையளிக்கும் விடயமாகும். பொலிஸாரின் அத்துமீறிய இத்தகைய செயற் பாடு குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை...

வடக்கில் அரச பயங்கரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதா? என். சிறிகாந்தா

>பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி முழுமையாக ஆராயப்பட வேண்டும். இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் கோருகின்றேன் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புத் தொடர்பில்...

சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சுரேஸ் கேள்வி

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது – சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா – அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கொலை சம்பவம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள...

ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் இன்று!

கேலிச்சித்திர ஓவியரான அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது சொந்த இடமான மாதகலில் நடைபெறவுள்ளது. கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ்ப்பாண மாவட்டம், மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளரான அஸ்வின் சுதர்சன் கடந்த 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் திடீரென ஏற்பட்ட வயிற்று வலியாலும் போதிய சிகிச்சை அளிக்கப்படாமையாலும் மரணமடைந்தார். இவரின் பூதவுடல்...

பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு

யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் தொடர்பில்...

வடக்கில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது!

வடக்கில் கடற்மையாற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடக்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சுடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக...

பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பு சாதாரணமானதே! பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச்...

யாழ். பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டமை பாரதூரமானது: மாவை சேனாதிராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்ஷன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் காங்கேசன்துறை வீதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டிருப்பதான...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு

யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு கலகம் அடக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவலையடுத்து, இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்டு, பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு...

யாழ்ப்பாணத்தில் பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி

மீள்குடியேற்ற அமைச்சிற்கு உட்பட்ட பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்ற தொனிப்பொருளில் பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இதன் போது மீள்குடியேற்றம்...

வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவே வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது என்றுசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர்மேலும் தெரிவிக்கையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்த...

பல்கலைக்கழக மாணவர்கள் கொலை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்...

ஒரே வீதியை இரண்டு பக்கத்தில் இருவேறு விதமாக திறந்து வைத்த அமைச்சர்கள்

ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மற்றைய பகுதியை நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் திறந்து வைத்துள்ளனர். ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சந்திரலால் அபேகுணவர்த்தனவினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்...

பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம்: வைத்தியசாலைக்குச் சென்றார் மாவை

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, உடற்கூற்று பரிசோதனை இடம்பெறும் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற தகவலினால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்தனர். இதனையடுத்து,...

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களுக்கு அஞ்சலி!

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் 29ஆவது நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த 21 பேரும் கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இன்றைய தினத்தில் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68...

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...
Loading posts...

All posts loaded

No more posts