ஸ்ரீலங்கா அரசினால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆசிரியர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றினர்.
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்களும் மாமனிதருக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அரசியல் ஆய்வாளர் சி.ஜோதிலிங்கம் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர்.
கட்சியின் நல்லூர் கோட்ட இளைஞர் அணித்தலைவர் மயூரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வு மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி 6.30 மணியளவில் நிறைவு பெற்றது.