வட்டுக்கோட்டை சித்தன்கேணி பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை சிற்றூந்தில் பயணித்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.
தனது தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்தி , யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளார், எனினும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக யுவதியின் தந்தை காவற்துறையில் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடத்திச் செல்லப்பட்ட யுவதி குறித்து இதுவரையில் எவ்விதமான தகவல்களும் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.