இன்று நள்ளிரவு முதல் 48 வகையான மருந்துகளின் விலைகள் குறைகின்றன

48 வகையான மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பாக வர்த்தமானியில் வௌியிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நீரழிவு, இரத்தச் சோகை உள்ளிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் உட்பட 48 வகையான மருந்துகளுக்கான விலை குறைக்கப்படவுள்ளது. விலை குறைப்பு காரணமாக...

வடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம்

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்...
Ad Widget

கொக்குவில் விபத்தில் யாழ் .பல்கலை மாணவர்கள் இருவர் பலி

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே...

திருநெல்வேலி சிறுவன் விபத்து மரணம் மன்னிக்க முடியாத பாவச் செயல்: நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மன்னிக்க முடியாத பாவச் செயல் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய விபத்து மரணங்கள் ஏற்படாத வண்ணம் பேரூந்து சாரதிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திருநெல்வேலி...

மஹிந்தவின் மருமகனுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் முறையான உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவால் நேற்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது பாரிய...

அநுராதபுரத்தில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல்!!

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம்...

சாவகச்சேரி வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வாயிற் காவற் கடமையில் ஈடுபட்டிந்த வேலைப் பரிசோதகர் மற்றும் கவலாளி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். காவற் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மூவர் கொண்ட குழுவினர் தலைக் கவசங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

வாள்வெட்டு சந்தேகநபர்களைத் தேடி யாழில் வேட்டை

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, குழுமோதல்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயற்படத் தொடங்கியதுடன், முதல் நாள் ரோந்து நடவடிக்கையில் கொக்குவில் சந்திப்பகுதியில் வைத்து, வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளது. இந்தக் குழு தொடர்ந்து வரும் நாட்களில்,...

ஜனாதிபதி செலவு அதிகரிப்பு!! கல்விக்கான ஒதுக்கீடு குறைவு

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாக இந்தத் தொகை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக...

நல்லூர் பிரதேச சபையின் முன்பாக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நல்லூர் பிரதேச சபையின் உபஅலுவலகத்தின் பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது, அலுவலகத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லூர் பிரதேச சபை தலைமை அலுவலகம் முன்பாக பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை (20) ஆர்ப்பாட்டம் செய்தனர். காணிப் பிணக்கு தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி உபஅலுவலகத்தில் வைத்து இரு தரப்பினரை பொறுப்பதிகாரி சமரசம்...

வடக்கு சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரச்சாரம் இணையத்தளம் ஒன்றில் வௌியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக...

மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக மீண்டும் தில்ருக்ஷி நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிலிருந்து பதவி விலகுவதாக தில்ருக்ஷி அனுப்பிவைத்த கடிதம், நேற்று ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இன்று அவர் மீண்டும் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக, கடந்த 2015ஆம் ஆண்டு...

மதுபோதையில் பஸ் செலுத்தியவர் கைது

மதுபோதையில் பயணிகள் பஸ் செலுத்திச் சென்ற பஸ் சாரதியை புதன்கிழமை (19) மாலை அச்சுவேலி பகுதியில் கைது செய்துள்ளதாக அச்வேலி பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீதிச் சோதனையில் நின்றிருந்த பொலிஸார், இவரிடம் சோதனை நடத்தியபோது, மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது. கைதான சாரதிக்கு...

விபத்தில் குடும்பஸ்தர் பலி

கைதடிச் சந்திப் பகுதியில் புதன்கிழமை (19) இரவு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாபன சகாதேவன் ஜோகன் (வயது 36) என்பவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் சென்ற பஸ்ஸுடன், சாவகச்சேரியிலிருந்து கைதடி...

தெற்கு அதிவேக பாதையின் வேகம் 60 ஆக மட்டுப்பாடு

நாட்டில் தற்பொழுது பெய்து வரும் அதிக மழை மற்றும் பனி மூட்டம் என்பன காரணமாக தெற்கு அதிவேக பாதையில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை 60 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பாதை அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பாதையில் இடம்பெற்று வரும் விபத்துக்களைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள்,...

தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்களை கொல்லவோஅல்லதுகாணாமல் போகவோ செய்துள்ளது

ஊடக அறிக்கை 19.10.2016 இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,அதே போன்று படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை. நிமலராஜன்...

சிறுபான்மையினருக்கு இலங்கையில் உரிய இடமில்லை: ஐ.நா.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு உரிய இடமில்லை என்பது தெளிவாக தெரிவதாக, ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளர், நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்ததாக, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து...

கடத்தப்பட்ட 5 மாணவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை;கடற்படை சாட்சியம்

கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என ஸ்ரீலங்கா கடற்படைப் புலனாய்வு பிரிவின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில்...

இரா.சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியச் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடபெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இரா. சம்பந்தனைச் சந்திப்பதும், அவரது கருத்தை செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அதுல் கெசாப்...

முசலியில் மீண்டும் பதட்டம்!! : கடற்படையினர் இருமீனவர்களை கடத்தி சென்றுவிட்டதாக மக்கள் விசனம்!

முசலி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரிப்புக் கிராமத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கிராமத்துக்குள் புகுந்த கடற்படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டது. இன்னிலையில் கடற்படைச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படையினர் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று காலை கடலுக்குப்...
Loading posts...

All posts loaded

No more posts