யாழ். பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், நெல்லியடி,...

எமது கிராமமே ‘எமக்கு வேண்டும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்’

“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். “இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில்...
Ad Widget

‘எனக்கு இல்லமா?’ தெரியாது என்கிறார் சம்பந்தன்

“மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை எனக்கு வழங்குவதாக வெளிவரும் செய்தி தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பில்...

புதிய அரசியலமைப்பு முன்மொழிவு நாட்டை துண்டாடும் ஆவணமல்ல

உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரிடம் தெரிவித்துள்ளார். இது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல என்றும் தேரரிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்தார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும்...

ஐ.நா.வின் செயல் முறைகளும் ஈழத் தமிழர்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் டயஸ்போறா’ (Diaspora) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களை குறிப்பிடுகிறது. இச் சொற்பதம், சிதறல் என பொருள்படுகிறது. இச் சொற்பதத்தைஅழமாக ஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களென கூறுகிறது. இவ் அடிப்படையில், இலங்கைதீவில் தமது...

முத்தையன்கட்டு விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணமாக உலர் உணவு வடக்கு விவசாய அமைச்சு வழங்கியது

முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். முத்தையன்கட்டுக் குளத்தின்கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவை 6000...

புதிய வருட வேலைத்திட்டத்தில் வீடமைப்பு முன்னுரிமை பெறும்: யாழ்.அரச அதிபர்

2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகருக்கிடையிலான பாலம் அமைப்பு என்பன முக்கியமானதாகுமென யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள், புதுவருடத்தில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி பங்களிப்பு என்பன குறித்து விளக்கமளிக்கும் வகையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற...

வர்த்தக நிலைய கழிவகற்றும் பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பு?

யாழ்.மாநகரசபை தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மாகாணசபை உறுப்பினரும், உள்ளூராட்சி அமைச்சு விடயங்களை கையாளும் அங்கீகாரமளிக்கப்பட்ட உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளை அகற்றும் பணியை தனியாருக்கு வழங்குவதிலும் எதுவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மாநகரசபையில் தற்காலிகமாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களது...

சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி, ஆட்சி மாற்றத்தை கொண்டுவர மஹிந்த முயற்சி

சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேசத்தை வளர்த்து, அதனூடாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவினுடைய இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றது...

புத்தாண்டிலாவது என்னைப் பழிவாங்குவதை நிறுத்துங்கள்

புதிய ஆண்டிலாவது மைத்திரி – ரணில் அரசு என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். என்னைப் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு அரிசித் தட்டுப்பாட்டுக்கு சிறந்த தீர்வினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் உள்ள சிறீவர்த்தனாராமய விகாரையில் நேற்று நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,...

சிதம்பரம் செல்ல சிறீலங்கா அரசாங்கம் தடை!

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் சிவசேனை அமைப்பினால் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயூடாக வடக்கின் காங்கேசன் துறைமுகத்திலிருந்து சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி...

பொலிஸாருக்கு கஞ்சா விற்க முற்பட்டவர் கைது

1 கிலோ 800 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மணல்காடு பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை, உப்புவல்லை பகுதியில் வைத்து சனிக்கிழமை (31) கைதுசெய்துள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகிக்கப்பட்ட இளைஞன் ஒருவரிடம் தாமும் கஞ்சா வாங்குவது போல் பாசாங்கு செய்து அவரைக் கைதுசெய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக...

வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்திக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

சமாதானத்தைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தி அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்பார்ப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று வளமான நாட்டு மக்கள் என்ற வகையில் முன்னேறும் அபிலாஷையுடன் 2017ஆம் ஆண்டை வரவேற்க இலங்கை மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பட்டாசு கொழுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த சில வருடங்களுக்குள் இலங்கை அடைந்துள்ள...

மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரிவான வேலைத்திட்டம்

யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கான தூய குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனநாயகம் மற்றும் ஒழுக்கநெறி மிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உண்டு என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய நல்லாட்சி...

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வு

முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியில்: எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர்...

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில்...

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிரிக்கப்படும்

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தியின் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

செயற்கைக் கண் வில்லைகளை இலவசமாக அல்லது குறைந்த விலைக்கு வழங்க நடவடிக்கை

நோயாளிகளின் நலன்கருதி அவர்களுக்கான மருந்துப் பொருட்களினதும், பயன்படுத்தப்படும் வைத்திய உபகரணங்களினதும் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச மருத்துவத்தறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன மேலும் தெரிவித்தாவது: முதற் கட்டமாக செயற்கை கண் வில்லைகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பாடசாலை சீருடை : இன்று கடை நாள்

பாடசாலை மாணவர்கள் இலவச சீருடைகளை பெற்று கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு பத்திரத்தின் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...
Loading posts...

All posts loaded

No more posts