- Monday
- May 11th, 2026
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி...
இந்த வருடம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளினதும் மரபணு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக பிரஜைகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு தகுதி பெறுவோரின் எண்ணிக்கை...
முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்று (திங்கட்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சிலையின் தோற்றம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்திருந்த நிலையில், சர்ச்சைகளை கடந்து குறித்த சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில்...
பொலிஸாரை தகாத வார்த்தையால் பேசிய இளைஞரை யாழ். பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைதுசெய்யப்பட்ட இளைஞர் நேற்று (திங்கட்கிழமை) யாழ். பஸ்தியன் சந்திப்பகுதியில் இளைஞர்களுடன் நின்றுள்ளார். அப்போது, சிங்கள மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த...
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 53 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் நூற்றிற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் முதற் தடவையாக சிறீலங்கா அரசாங்கம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள்...
எஸ்.எல்.எஸ் (SLS) தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் (ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு, இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், இன்று அறிவித்தது. அதனால், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவதானமாகக் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களிடம், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், அறிவுறை வழங்கியுள்ளது. தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள்...
வடமாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (2) வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. நேற்று முற்பகல் 11 மணியளவில் இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறப்பு...
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கணவன்...
தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழ்ப்பாணத்திற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (2) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எம்மிடம் உள்ள இறைமையினை கையளிக்கப் போகின்றோமா இல்லையா என்பதே கேள்வி. மிகவும் நம்பிக்கைக்குரிய...
போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட...
வவுனியா பன்றிக்கெய்தகுளம் கிராமத்திலுள்ள கிணற்றில் விழுந்து தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். சதீஷ்வரன் சுதாஜினி (வயது – 30) என்ற தாயும் சதீஷ்வரன் டினோஷன் (வயது – 7) என்ற மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் தாய் இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டிலிருந்து வெளியே சென்றபோது தாயும் மகனும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் திரும்பி வந்தபோது இருவரையும்...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமக்கு வேலை...
தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இன்றுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 ஜனவரி 2 ஆம் நாள் திருகோணமலை,...
சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என்று அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தர்மசேனா ரிசீகரன் என்ற 34 வயதான 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்போருக்கு இடையிலான தீர்க்கமானதொரு கலந்துரையாடல், இம்மாதம் இரண்டாவது வார காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பவரொருவர் தெரிவிக்கின்றார். இந்தக் கலந்துரையாடலின் போதே, அரசாங்கத்தை விட்டு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், எதுஎவ்வாறு இருப்பினும் தானே நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிறந்திருக்கும் புதுவருடத்தில் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, ஊடவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதன்போது, 2017ம்...
பொதுச்சொத்துக்கள் பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வீதிகளின் ஓரங்களில் நிழல்தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் என்பன யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (01.01.2017) முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை விளம்பர நோக்கத்துக்காகவும் அறிவுறுத்தல் நோக்கத்துக்காகவும் காட்சிப்படுத்தவிரும்புவோர் இரண்டுக்கு மேற்படாத சுவடிரொட்டிகளை யாழ்.மாநகரப் பகுதிகளில் நிறுவியுள்ள விளம்பரப்...
யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் 01.01.2017அன்று நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் பயன்பெற்றனர். யுத்தத்தினாலும் விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது...
சுங்க வரி இல்லாமல் நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், தற்பொழுது காணப்படும் அரிசியின் விலையிலிருந்து 20 ரூபாய் குறைவாக நுகர்வோருக்கு வழங்க முடியும் என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி, சுங்க வரி இல்லாமல் இறக்குமதி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில்...
Loading posts...
All posts loaded
No more posts
