வவுனியாவில் இருந்து நெல் ஏற்றுமதி செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு

வவுனியா மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லினை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்து வவுனியா பாவக்களம் நெற் களஞ்சியசாலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாரவூர்திகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) பாவற்குளம் படிவம் 6 பகுதி களஞ்சியசாலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில்...

சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அவசியம்: நல்லிணக்க செயலணி பரிந்துரை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு...
Ad Widget

காங்கேசன்துறையில் கைவிடபட்ட நிலையிலிருந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டன

கைவிடப்பட்ட நிலையில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் காணப்பட்ட ஒரு தொகை ரயில் பெட்டிகள் ரயில்வே திணைக்களத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அகற்றப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக யாழ்.குடாநாட்டில் இருந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் காணப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தற்சமயம் மீள் குடியேற்ற நடவடிக்கைகள்...

ஒரே இனம், ஒரே நாடு, ஒரே கொடியின்கீழ் பணியாற்றுவேன், புதிதாகப் பணியேற்பவர்களிடம் கையொப்பம்!

இலங்கையில் ஆட்சிசெய்யும் நல்லாட்சி எனப்படும் சிங்கள அரசினால் புதிதாக அரச கடமைகளைப் பொறுப்பேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றுநிருபம் தமிழ் மொழியில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதில் அனைவரையும் கையெழுத்திட்டு அவர்களது பணியை ஆரம்பிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது. குறித்த அந்த ஆவணத்தில் இன்று ஆரம்பிக்கும் புத்தாண்டில், ஒரே நாட்டின், ஒரே இனத்தின், ஒரே கொடியின்…. என ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த இனவாதச்...

திருநெல்வேலியில் நகை, பணம் திருட்டு: ஒருவர் கைது

திருநெல்வேலி ஆடியபாதம் கிழக்கு வீதியில் உள்ள வீட்டில் புகுந்த திருடர்கள், 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை, மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளதாக தெரிவித்த கோப்பாய் பொலிஸார் , சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளதாகவும் கூறினர். இந்த கொள்ளைச் சம்பவம் திங்கட்கிழமை (02) அதிகாலை 2:45 மணிக்கும்...

சந்தேகநபர்களில் நால்வர் சரணடைந்தனர்

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் கடந்த 25ஆம் திகதி, இண்டு நபர்களை இரும்பு கம்பியால் குத்தி படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர், செவ்வாய்க்கிழமை (03) சரணடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்....

ஜனதிபதியின் யாழ். விஜயம் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு, தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றிய நிலைப்பாட்டை மாற்றிய இராணுவ அதிகாரி

இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், ​நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய...

கிளிநொச்சி மகா வித்தியாலய காணி ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படும்

இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி...

மிருசுவிலில் ஆயுதக்குழு அட்டகாசம்!

குறித்த நபரொருவரை வெட்டுவதற்காக ஆயுதங்களுடன் வருகை தந்த 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவ் பகுதியில் நின்றிருந்த மூவரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் மிருசுவில் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 600 நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக 600 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். என வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டு 3இலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று உள்ளனர். அதில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் வைத்தியசாலை...

கைத்துப்பாக்கியை ஒப்படைத்ததற்காக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு பணப்பரிசு!

கடந்த வருடம் மார்ச் மாதம் தனிப்பட்ட பாவனைக்காக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் 10,000 ரூபா பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தவராசாவுக்கு, அவரது...

கனடாவிற்குச் செல்லவேண்டாமென வடக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்!

வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள்...

‘பொருத்து வீட்டுத்திட்டத்தை நிராகரியுங்கள்’

பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், உயர்மட்ட...

14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

1998ஆம் அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் சிவிலியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் விளக்கமறியலை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார். 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி, சரஸ்வதி சௌந்தரராஜன்,...

பதில் முதல்வராக பொ.ஐங்கரநேசன் சத்தியப்பிரமாணம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனிப்பட்ட விஐயமாக லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கு செல்வதன் அடிப்படையில் அவரின் பதவியினை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். குறித்த சத்தியப்பிரமாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது....

இன்று முதல் விசேட போக்குவரத்து நடைமுறை

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக விசேட போக்குவர்த்து நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படும்.

மேலும் 50 மருந்து பொருட்களின் விலைகள் குறைப்பு!

50 மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என மருந்துப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில், மருந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களுக்கும் அரச மருத்துவ தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.48 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தால் குறைக்கப்பட்டன.இந்த...

வழிநடத்தல் குழுவிலிருந்து விலகுவது சாணக்யமானதல்ல

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் எதிர்கால அரசியல் திட்டமிடல்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடையபெயரைக் குறிப்பிட்டு இவ்விருவரும் அரசியலமைப்பை உருவாக்கும் பிரதான வழிப்படுத்துதல் குழுவிலிருந்து இராஜனாமா செய்யவேண்டுமென கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களே அறிக்கைகளை வெளியிடுவது அவசரப்படும் காரியமாகும். அது...

எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நடந்த புது வருட நிகழ்வு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின்  அலுவலகத்தில் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது.
Loading posts...

All posts loaded

No more posts