- Monday
- May 11th, 2026
யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பத்து இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஜகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (புதன்கிழமை) இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன....
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவீரர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த நிறைவிற்கு பின்னர் சிதைக்கப்பட்ட குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினர் வசமிருந்த கனகபுரம்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததை அடுத்து மேன்முறையீட்டிற்கான நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம்...
பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள பாடசாலைகளுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 7911 பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு பகல் உணவு வழங்கப்படவுள்ளதாக அவர்...
யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்களே குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி நிற்கின்றோமே தவிர பழிவாங்க முயற்சிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயலணியின் இறுதி அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு...
வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஒரு அங்கமாக பலாலி, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பலமிக்கதோர் இலங்கை’ எனும் எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வெளியிட்டுவைத்து உரையாற்றிய பிரதமர், குறித்த பொருளாதார திட்டத்தில் பலாலி விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தியில்...
அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்காக 1 மில்லியன் சீனர்கள் நுழைவு விசா பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அமைப்புத் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ண நிராகரித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க...
இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று யாழ்பாணத்திற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இந்தியாவின் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமானத்தளம், துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டபத்தினையும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,...
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவர் லோர்ட் நெசபி நேற்று (04) யாழ்ப்பாண மாவட்ட...
வடக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் 16,17,18ஆம் திகதிகளில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016ஆம் ஆண்டின் 1000 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கிடைத்தது....
பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களை பயமுறுத்தி அதிபர்கள் வேலை வாங்க முடியாதெனவும் அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக தொழிற்சங்க செயற்பாட்டை மேற்கொள்வோமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், நாடு பூராகவும் பாடசாலைக் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 1.30மணிவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடமாகாணத்திலுள்ள குறிப்பிட்ட...
பல்கலைக்கழகத்திற்கு 2016-2017ம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஏனைய கற்கைநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படையாக...
யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க குறித்த பொலிஸ் புலனாய்வாளர், அவரை யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்...
விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுளார். முல்லைத்தீவு தேவிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே...
மூன்று தசாப்தகால யுத்தத்தின் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, முப்படையினரின் பங்களிப்புடன் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார். பௌத்த விகாரைகள் மட்டுமன்றி, தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் ஆரம்பிப்பதற்கு...
நாடளாவிய ரீதியில் இன்று முதல், குளிர் வானிலை அதிகரிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலைவேளையில் அல்லது இரவு வேளைகளிலேயே குளிரான நிலைமை காணப்படும் என்றும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வு கூறப்பட்டது போல, நிகழுமாயின், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. “மத்திய, சப்ரகமுவ...
மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்னவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசிகள் விற்பனை செய்யப்படுவதாக, அண்மையில் ஊடகங்களில்...
கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் பிரம்மாண்டமான பூஜையுடன் ஆரம்பமான படம் 'சபாஷ் நாயுடு'. முதல் கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தை இயக்குவதாக இருந்த டி.கே. ராஜீவ்குமார் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் கமல்ஹாசனே படத்தை இயக்க ஆரம்பித்தார். அமெரிக்காவில்...
இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை...
Loading posts...
All posts loaded
No more posts
