Ad Widget

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாவகச்சேரி கச்சாய் பகுதியில் படி ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (19) காலை இடம்பெற்ற விபத்தில் உதயகுமார் வினோத்குமார் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரழந்துள்ளார்.

சாவகச்சேரி பகுதிக்கு சென்று விட்டு கச்சாயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போதே குறித்த விபத்தில் சிக்கியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts