யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல் ; வங்கி ஊழியர் கைது

புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு யாழ்.பல்கலைக்கழக மாணவனைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட மாணவன் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே குறித்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னைய செய்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல்

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆள்கள் தாக்கியதில் விவசாய அமைச்சருக்கு காயம்

யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை ஆளுங்கட்சியினருக்கும் , எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை...
Ad Widget

இனப்பிரச்சினை தீரும்வரை நாங்கள் எதிர்க்கட்சி: சிவாஜிலிங்கம்

எமது இனப்பிரச்சினை தீரும்வரை நாங்கள் எதிர்க்கட்சிதான். இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் அண்ணன், தம்பி என்ற நிலையில் உள்ளார்கள். ஆனால், அதிகூடிய துன்பத்தை விளைவித்தவரை அகற்றவேண்டும் என்பது இன்றைய நிலைமை' இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும்...

பளையில் அபிவிருத்தி நடவடிக்கைகள்

வடமாகாண சபை உறுப்பினர் அரியரட்ணம் பசுபதியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதேசத்திலுள்ள 8 வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் சுயதொழில் உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைக்கொண்டு அம்மக்கள் சுயதொழில் வாய்ப்பாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டதுடன்,...

தெல்லிப்பழை, உடுவில் பிரதேசங்களை அனர்த்த பிரதேசங்களாக அறிவிக்க கோரிக்கை!

சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்களுடன் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று திங்கள் கிழமை முற்பகல் வலி....

ஐந்து சந்தியில் குழு மோதல், மூவர் படுகாயம்

யாழ். ஐந்து சந்திப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற குழு மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் மூன்று சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தீக்கிரையாக்கப்பட்ட கடையில் ஏற்பட்ட தகராறு குழு மோதலாக மாறியதாகவும் பொலிஸார் கூறினர். இதனைத் தொடர்ந்து,...

சிட்னி சம்பவத்துக்கு ஜனாதிபதி கண்டனம்

அவுஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் 13 பேரை தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜஸபக்ஷ கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தனக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல் பரப்புரைக்கு சிறைக் கைதிகளை பயன்படுத்தும் ஆளும் கட்சி – கபே

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைக்காக சிறைக் கைதிகளை பயன்படுத்தப்படுவதாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்து சிறை கைதிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபே விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல்

அரச புலனாய்வு பிரிவுனர் என அடையாளம் காட்டிக்கொண்ட நால்வரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு 1௦.௦௦ மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாம் ஊரெழு இராணுவமுகாமை சேர்ந்த அரச புலனாய்வு பிரிவினர் எனக் கூறி யாழ், பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்த இவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக...

ஓட்டுத்தொழிற்சாலையை மீள இயக்க நடவடிக்கை!

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை அடுத்த ஆண்டு முற்பகுதியிலிருந்து புதுப் பொலிவுடன் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை...

காங்கேசன்துறை – அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் மழை?

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (15) இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மன்னார் காங்கேசன்துறை வரையான மாத்தறை திருகோணமலை பொத்துவில் மட்டக்களப்பு அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் இடி காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவம் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான கடலோரங்களில்...

தமிழர்களின் தீர்வுக்கு இணக்கமும் கூட்டு முயற்சியும் வேண்டும் – ஈ.பி.டி.பி

இணக்கமும் கூட்டுமுயற்சியும் இருந்தால் தான் எமது இனத்துக்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன், சனிக்கிழமை (13) தெரிவித்தார். ஊர்காவற்றுறை தொகுதிக்கான இளைஞர் மற்றும் மாதர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டிருப்பதாலும்...

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

ஏ– 9 வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற விபத்தில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். டபிள்யு.ஏ.பியந்த (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்தவராவார். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின், நீதிமன்றத்துக்கான கடமைகளை செய்யும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ஞாயிற்றுக்கிழமை காலை...

8 வயது சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்.நுணாவில் மத்தி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் பெற்றோர் சனிக்கிழமை (13) காலை சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில், மாலை...

வவுனியாவில் 33 பேர் சாட்சியமளிப்பு!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது அழைக்கப்பட்டவர்களில் 33 பேர் சாட்சியமளித்தனர். நேற்றய தினம் சாட்சியமளிப்பதற்காக 52 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் 33 பேரே சாட்சியமளித்தனர். நேற்றய சாட்சியங்களில் அதிகளவானவை இராணுவத்திற்கு எதிராகவே பதிவாகின. செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் இருந்து 10 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு...

டிசம்பர் 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு, 50000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளதாகத்...

வேட்பாளர்கள் இருவரினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின் முடிவை அறிவிப்போம்!- மாவை

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின்...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்.பல்கலையில்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத் தொகுதியில் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வில் பல்கலை மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கண்டி – யாழ். விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு, கண்டி- யாழ் நகரங்களுக்கிடையில் விசேட ரயில் சேவை நேற்று ஆரம்பமானது. முதலாவது ரயில் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11.35 யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பழை கிழக்கிலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு

தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், சனிக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து சனிக்கிழமை (13)...
Loading posts...

All posts loaded

No more posts