யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ், புத்தாண்டு தின நிகழ்வுகள் யாழ். கோட்டைக்கு அருகாமையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்மஸ், புத்தாண்டு தின நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
300 அடி உயரத்தினை உடைய வர்ண மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்திலான வடிவமைப்புக்கள், மற்றும் இயேசு கிறிஸ்மஸ் தினத்தில் அவதரித்த வரலாறுகளை எடுத்துக்காட்டும் வகையிலான சித்திரங்கள் அலங்கரிக்கப்பட்டதுடன், கரோல் பாடல்களும் இசைக்கப்பட்டன.
இவ் விசேட கிறிஸ்மஸ் கூடம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.