Ad Widget

நாட்டின் முழு பாகங்களிலும் மந்தமான காலநிலைக்கு சாத்தியம்!

வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம் எனவும் குறிப்பாக மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் இம் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாகவும் இன்று (20) வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் இம்மழைவீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத்தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையும் மின்னலுக்கான சந்தர்ப்பமும் நிலவுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் – மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் சிறிதளவிலான மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படும்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 28 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை சில பகுதிகளில் குறைந்த மழைக்கான சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு இரவில் அதிக மழை பெய்யலாம்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 31.9 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 12.9 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்

பதுளை மாவட்டத்தில் மகாடோவா பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 93.9 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.

Related Posts