- Thursday
- July 31st, 2025

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் சபை உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரது மோட்டார் சைக்கிள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தீவைக்கப்பட்டதாக மருதங்கேணி உப-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன்பக்கத்தில் விடப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

அரச தலைவர் கண்டிக்கு விஜயம் செய்யும் சந்தரப்பங்களில் பயன்படுத்தும் கண்டியிலுள்ள ஜனாதிபதி உத்தியோகபூவர் இல்லமான ஜனாதிபதி மாளிகையை மக்கள் பார்வையிடுவதற்கான சந்தரப்பம் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் பார்வைக்காக இந்த மாளிகையை திறந்துவிடுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பிலிமத்தலாவை நிலமேக்கு சொந்தமான வளவில், ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டதுடன் குறித்த வீடு “அரசமாளிகை”...

அலரிமாளிகையில் இருந்ததாக கூறப்படும் போனி எனப்படும் சிறிய இன குதிரைகள் நான்கு, கோழிகள் மற்றும் ஒரு தொகுதி கோழிக்குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்துக்கு பொறுப்பாகவிருந்த நபரிடமிருந்தே மேற்குறிப்பிட்ட குதிரைகள், கோழிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை 80ஆயிரம் ரூபாவுக்கு தாம் பெற்றதாக பிலியந்தலையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பணியாற்றிய மாலபேயைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த...

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது....

அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய அரசின் 100 நாள் திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் . இதில் அரச...

தன்னைப் பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன் என்று தாண்டவம் ஆடியுள்ளார் பெண் ஒருவர். அதனால் அவரைப் பிடிக்க முற்பட்ட பொலிஸார் செய்வதறியாது கைகட்டி வேடிக்கை பார்த்தனர். தொலைத்தொடர்பு வயர்களை அறுத்தனர் என்று தெரிவித்து கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் தாயே இவ்வாறு நெல்லியடிப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தாண்டவம் ஆடினார். பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக குறித்த...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமது நிலைப்பாடு...

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முடிவெடுத்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத்...

"நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் அகற்றப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்." - இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். நேற்று முன்தினம் கண்டிக்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன தலைமைப் பீடாதிபதியை சந்தித்து ஆசி வேண்டினார். இதன்போதே மேற்கண்ட...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான சம்பவங்கள் அம்பலமாகிகொண்டிருக்கின்றன. தங்களுக்கு கிடைக்கின்ற இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டவிரோதமான பொருட்களை மீட்டுவருகின்றனர். சனிக்கிழமை (17) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை...

'தேசிய பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாம் தயார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வுத் திட்டத்தை உருவாக்க புதிய அரசு தயாராக உள்ளதா?' என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கேள்வி எழுப்பினார். வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக...

காலி துறைமுகத்தில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கப்பலில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் 12 இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை, எவான்ட்...

சபுகஸ்கந்தை - மாபிம பிரதேசத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மஹர நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, சபுகஸ்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை...

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை கொழும்பில் சனிக்கிழமை (17) சந்தித்து கலந்துரையாடும் போதே, விநாயகமூர்த்தி இந்தக்...

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.அது இலங்கைக் கெதிரான விசாரணையல்ல குற்றமிழைத்த தனிப்பட்ட நபர்களுக்கெதிரானது என்றார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல்...

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை...

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வடமாகாண அபிவிருத்தி சம்பந்தமாகவோ அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவோ புதிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் அவரை வடமாகாண முதல்வர் உத்தியோகபூர்வமாக சந்தித்து உரையாடவுள்ளாரா என கேட்ட போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

வடமாகாண பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு புதிய ஆளுநரான எச்.எம்.ஜீ.எஸ்.பளிக்ஹக்காரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், சனிக்கிழமை (17) தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில், பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். அத்துடன் பாடசாலை நடைபெறும் காலங்களில் ஆசிரியர்கள்,...

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கடந்த காலங்களில் இருந்த சிலர், நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் தங்கராசா, சனிக்கிழமை (17) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு...

All posts loaded
No more posts