Ad Widget

இளவாலையில் இரு படகுகள் தீக்கிரை

இளவாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகோதரர்களின் இரண்டு படகுகள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தீயிட்டு எரிக்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (16) தெரிவித்தனர்.

சகோதரர்களான பாக்கியநாதன் றேகன் மற்றும் பாக்கியநாதன் கமில்ரன் ஆகியோருடைய இரண்டு படகுகள், இரண்டு படகு இயந்திரங்கள் 40 வலைகள் என்பன தீயால் எரிந்துள்ளன.

இரண்டு படகுகள் எரிவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்று ஒரு படகை கடலுக்குள் தள்ளி தீயை அணைத்தமையால், அரைவாசி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதனால் இரண்டு மீனவர்களுக்கும் 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts