Ad Widget

வீடு தீக்கிரை

ஆவரங்கால் மந்திரிமனை ஜே-277 பகுதியில் அமைந்துள்ள வீடொன்று திங்கட்கிழமை (16) மாலை தீக்கிரையாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தனர்.

வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றாக எரிந்தமையால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி வீட்டில் சாமி அறையில் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்த தீ, வீடு முழுவதுமாக பரவியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி வீட்டின் உரிமையாளர் நாளந்த கூலித்தொழில் செய்வதுடன், மனைவி வயல் வேலைக்குச் செல்பவர். தீ விபத்து ஏற்பட்ட போது, இவர்கள் வீட்டிலிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts