Ad Widget

வடக்கிலுள்ள 10 பிரதேச சபைகளுக்கு வாகனங்கள்

பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார்.

கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய வழங்கி வைத்தார்.

அதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு , பருத்தித்துறை , வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை , வலி .மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் தனக்கு வாகனம் கிடைக்கவில்லை என்றும் எதிர்காலத்தில் வாகனத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கரு ஜெயசூரியவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Posts