- Sunday
- June 22nd, 2025

போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடன் வெளியிடுமாறு சர்வதேசத்தை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தாலும் வெகுஜன அமைப்புகளாலும் செவ்வாய்க்கிழமை (24) காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் அஹிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வலிகாமம் தெற்கு வர்த்தக சம்மேளனம் தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் லயன் சி.ஹரிகரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ள...

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப் படுகொலைகள் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வடமாகாண சபை உறுப்பினர் சி.சிவமோகனின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய மடத்திலிருந்து 70 வயது மதிக்கத்தக்கவரின் சடலத்தை திங்கட்கிழமை (23) காலை மீட்டதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கூறினர். ஆலய மடத்தில் தங்கியிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவரின் பெயர் விபரங்கள் இன்னும் தெரிவியவரவில்லை. சடலம் மீட்கப்பட்டு ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய அமைப்பாக மாபெரும் ஜனநாயக சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு சென்றுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

இலங்கை-இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி சென்னையில் நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. தமிழக மீனவர்களின் இழுவை படகுகளே இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினையாக காணப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அரசாங்கம் முன்வைத்த மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகின்ற...

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சைவ மகா சபை பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் இழப்புகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பது அவசியம் என்று தெரிவித்த மேற்படி சபை காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதி...

யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசே தலைமையில் கடந்த 21, 22 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு புல் மூன்...

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி நேற்று(22) பிற்பகல் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான கடவுச் சீட்டை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் நேற்று பிற்பகல் மாலம்பேயிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி பொலிஸ் சிரேஷ்ட அத்தியகட்சரும் பொலிஸ் ஊடகப்...

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புராதன தலைநகரான அநுராதபுரத்துக்கும் விஜயம் செய்யலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் அடுத்த நாளான 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் பிரதமரின்...

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர் ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார். நோர்வே - ஒஸ்லோ பல்கலைக்கழகம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 48,000 தாய்மார்களிடம்...

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது அதாவது 26ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைக்கவுள்ளார். அன்று காலை 11 மணிக்கு மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக்கூடத்தை திறந்துவைக்கவுள்ளதுடன்...

திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் எவரும் தற்போது இல்லை என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். திருகோணமலையில் 'கோட்டா' தடுப்பு முகாமில் 700 பேர் வரையிலும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் 35 குடும்பங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் புதிய அரசு உடன் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓர் இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாடு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில்...

இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டு வந்தாலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையென மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின், 'ஜெனீவாத் தீர்மானமும் மெய்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு' என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை...

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது, இருவருக்கும்...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு...

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின்...

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது....

All posts loaded
No more posts