யாழில் பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக போராட்டம்

யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை யாழ். கிறீன் ரெஸ்ட் விடுதியில் காணாமல் போனோர் சங்கத் தலைவி ஸ்ரீகாந்தியால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதன்போது பதிவுகளை மேற்கொள்வதற்காக காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர்கள் பல மாவட்டங்களில்...

உள்ளக விசாரணை நம்பகமற்றது : ஜனாதிபதி ஆணைக்குழுவாலும் எதுவித விமோசனமில்லை – தர்ஷன்

உள்ளக விசாரணையென்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பகத்தன்மையற்ற விசாரணையாகவே அமையுமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் தர்ஷன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கப்படவேண்டும் என்பதிலும் குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில்...
Ad Widget

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பெருட்களில் குளறுபடி

மகளிர் விவகார அமைச்சினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பெருட்கள் உரிய முறையில் சுன்னாகம் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தினால் வழங்கப்படுவதில்லையென நிவாரணத்தைப் பெறும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை வழங்க வேண்டும் என்பது மகளிர் விவகார அமைச்சின் கட்டளையாகும். இதன் கீழ் நெத்தலிக் கருவாடு மற்றும் ரின்...

உயர்தர பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் பரப்புரைப் பணிகளால் அசௌகரியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள்,...

பிரபாகரனின் அரசியல் மேடையில் ஜ.போ.க.வின் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் அறிவித்த யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் கோயில் வளாக மேடையில் வைத்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன், 1987ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியே மேற்கண்ட...

இந்துக் கோவில் பராமரிப்பில் அரசாங்கம் தலையிடக்கூடாது

இந்துக்கோவில் பராமரிப்பு பணிகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது.அப்பணியை கோவில் தர்மகர்த்தாக்கள்,தர்மகர்த்தா சபைகள் தான் மேற்கொள்ள வேண்டும் என இந்து மதம்,மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்காமணி மண்டபத்தில் இந்து ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

ஆசிரியர் என்னை அடித்தார் ஆனால் என் பெற்றோர் பொலிஸில் முறையிடவில்லை- ஜனாதிபதி

பாடசாலையில் தான் கல்வி கற்ற காலத்தில் பாடசாலை அதிபர் ஒரு முறை தன்னை பிரம்பு உடையும் வரையும் அடித்ததாகவும் அதற்கான காரணம் என்னவென்று தான் இன்னும் அறியவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு அசேகா கல்லூரியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு அவர்...

கொழும்பு – யாழ் பேரூந்து விபத்து!

கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்து...

அமைச்சுப் பதவிகளையோ சலுகைகளையோ பெற்றுக்கொள்ளாது கூட்டமைப்பு! – இரா.சம்பந்தன்

தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் இளைஞர் அமைப்புக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணம் எவ்விடத்திலும் தரிக்கப்...

கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்தவை ஏராளம் – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் நாடாளுமன்றம், மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்தவைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டியில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே எம்.ஏசுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என...

நாடாளுமன்றில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் – மதனி

கடந்தகால தேர்தல்களைவிட இம்முறைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. போட்டியிடுகின்ற பெண்களை நாடாளுமன்றம் அனுப்பி பெண்களுக்காக குரல் கொடுக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி மதனி நெல்சன் தெரிவித்தார். நல்லூரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர்...

அளவெட்டி, மல்லாகம் பகுதி கிணறுகளில் கழிவு எண்ணெய் இல்லை

கழிவு எண்ணெய் கசிவு உள்ளதாகக் கூறப்பட்ட அளவெட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் தற்போது எண்ணெய் கசிவு காணப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால் சுற்றுப்புறத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த எண்ணெய் கசிவானது மல்லாகம், அளவெட்டி எனப் பரந்து, வலிகாமம் மேற்கு...

கட்டடங்கள் மட்டும் எஞ்சியுள்ள மகேஸ்வரனின் குடியேற்றத்திட்டம்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனால் கல்லுண்டாய்வெளியில் நிர்மாணிக்கப்பட்ட குடியேற்றத்திட்ட வீடுகளின் கூரைகள் அனைத்து திருடப்பட்டு தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சிய நிலையில் உள்ளது. இந்துக் கலாசார அமைச்சராக மகேஸ்வரன் பதவி வகித்திருந்த காலப்பகுதியில், யாழ். நகரில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாமல் இருந்த குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்காக கல்லுண்டாய்வெளியில் 25 வீடுகளை...

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் இசைக் கச்சேரி மூலம் தேர்தல் பிரசாரம்!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் கட்சிகள் இந்தியாவின் தேர்தல் பிரசாரங்களைப் பின்பற்றி, இசைக் கச்சேரிகள் நடத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்;ப்பாணம் வருகை தந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார நிகழ்வில், இந்தியாவில் பிரசித்திபெற்ற சுப்பர்...

 உங்களுக்கு தெரியுமா? தகவல் தருமாறு கோரிக்கை

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் இலக்கம் 90/7 கடவத்தை வீதி, தெஹிவளை எனும் முகவரியைச் சேர்ந்த வெலே சுதா என்று அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமாராவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். போதைப்பொருள் வியாபாரம் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை சேகரித்த வெலே சுதாவின்...

கூடப்பிறந்த சகோதரியை வல்லுறவுக்கு உட்படுத்திய சகோதரனுக்கு 5 வருட கடூழியச் சிறை

சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் சகோதரனுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த மஹிந்த முயற்சி! – அமைச்சர் கயந்த சுட்டிக்காட்டு

"கடந்த காலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்." - இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக. ஐக்கிய தேசியக் கட்சியின் தலையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அவர்...

யாழ்ப்பாணத்தில் அச்சத்துடனே வாழ்கிறோம்! சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்!! – நயினை விகாராதிபதி

யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கைகோர்த்தன....

சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் – தந்தை தீக்குளிப்பு

கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், 16 வயதுடைய சிறுமியும் காணாமற் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம்...

நாட்டை பிரித்து வேறுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை

நாட்டை விரும்பாத டொலர்களுக்கு வேலை செய்யும் சிவில் அமைப்புகளுக்கு மத்தியில் உண்மையில் நாட்டை நேசிக்கும் தேசிய அமைப்பு இருப்பது மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே...
Loading posts...

All posts loaded

No more posts