Ad Widget

மக்களின் சுய நிர்ணய அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தியாகங்களிற்கு பெறுமதி கிடைக்கும் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும் மனித உரிமை செயட்பட்டளருமான சின்னமணி கோகிலவாணி ,கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் செல்வன் விமல் , மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றும் போது ;-

விடுதலை போராட்டத்திற்கு இம் மண் பெரும்பாலான இளைஞர், யுவதிகளை பெரும் தியாகங்களை செய்திருகின்றனர், எம் மக்கள் சொத்து உடமைகளையும் இந்த தேசத்திற்காக இழந்துள்ளார்கள்.
எமது மக்கள் செய்த இந்த தியாகத்திற்கு ஒரு பெறுமதி கிடைக்க வேண்டும்.

அது தமிழ் மக்களின் சுய நிர்ணைய அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே அந்த தியாகங்களிற்கு பெறுமதி கிடைக்கும், அந்த அங்கீகாரங்களுக்காக எமது கட்சி கஜேந்திர குமார் பொன்ன்னம்பலம் தலைமையில் உறுதி உடன் போராடும்.

அக்கராயன் பிரதேசம் சிறீலங்கா இராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்க பட்டு அளிக்கப்பட்டுள்ளது மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களால் அப் பிரதேசம் புறக்கணிக்க பட்டுள்ளது . புலிகளின் காலத்தில் இம் மக்கள் சந்தோசமாகவும் பதுகாப்பாகவும் வாழ்ந்தார்கள். இன்று நிலைமை தலை கீழாக மாறி உள்ளது. போரால் அழிந்த இக் கிராமத்து மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு நாங்கள் பாடு படுகின்றோம். புலம்பெயர்ந்த மக்களின் உதவி யுடன் சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம்,வேலை வாய்ப்புக்களை இளைஞர், யுவதிகள் மட்டத்தில் பெற்று கொடுப்போம்.

Related Posts