Ad Widget

இ.போ.ச. – தனியார் பஸ் சேவையினர் பருத்தித்துறையில் மோதல்!

தொழில் போட்டி காரணமாக இ.போ.ச பஸ் சேவையினருக்கும் தனியார் பஸ் சேவையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதல் சம்பவம் நேற்று புதன்கிழமை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை – முல்லைத்தீவு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பஸ், தனியார் பஸ்ஸை முந்திச் சென்றதாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது எனக் கூறப்படுகின்றது.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்ததாகவும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Related Posts