எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மூதூரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், இரு சமூகங்களின் உறவை பலப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மூதூர் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலையென திரண்டு வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.