காணாமல் போன மீனவரை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து ஆறாம் கட்டை எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 26.08.2015 காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்த வீதி மறியல் போராட்டமானது 11 மணிவரை இடம்பெற்றது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சல்லி கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்காக கடந்த...

புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் – நாளை பதவியேற்பு நடக்குமா?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இருதரப்பும் இன்னமும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத நிலையில், ஏற்கனவே அமைச்சரவை பதவியேற்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
Ad Widget

கட்சியின் செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன் – அங்கஜன்

தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன் தனது இராஜினாமாக் கடிதத்தை வடமாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவில்லையென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (25) சபையில் தெரிவித்திருந்தார்....

5500 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நியமனக்...

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் : வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வடமாகாண சபை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாகாண சபையின் 33ஆவது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி்.தவராசா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் மாகாண,...

இலங்கையில் உற்பத்தியாகும் கொக்கோ-கோலாவின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!

இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ - கோலா (பெரரேஜஸ்) நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார். கொக்கோ - கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய...

தேசிய அரசில் ஈ.பி.டி.பியையும் சேருங்கள்! ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!!

தேசிய அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பியையும் சேர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதே கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் விடுத்திருந்தார் எனத் தெரிய வருகின்றது. எனினும் ஜனாதிபதியை டக்ளஸ் சந்தித்தமையை மாத்திரம் ஜனாதிபதியின் ஊடகச்...

முல்லைத்தீவில் அரச போக்குவரத்து பஸ்ஸைக் கடத்திய இருவர் கைது!

முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ´ஹோஹம்ப´ என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று ​நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்....

நிஸா பிஸ்வால் – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த தேர்தலை நியாயமானதும் மற்றும் சுதந்திரமானதுமான முறையில் நடத்தியமை குறித்து நிஸா பிஸ்வால் தனது பாராட்டுக்களை...

வடக்கின் விவசாயத்தில்சிங்கள நியமனங்கள் மீளப்பெறாவிடில் போராடுவோம் – பொ.ஐங்கரநேசன்

வடக்கில் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களாக மிகப்பெரும் எண்ணிக்கையில் சிங்களவர்களை நியமித்திருப்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தமிழ்மக்களின் விவசாயத்துக்கு,தமிழ்மக்களின் பண்பாட்டுக்கு, தமிழ் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நியமனங்களை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிடில், அதற்கெதிராக நாம் போராடுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 33ஆவது...

சிவாஜியின் பிரேரணையை நிராகரித்தார் அவைத்தலைவர்

இலங்கை தீவில் உள்ள தமிழ்,சிங்கள மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சபை அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை அவைத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண...

சம்பூர் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா நிதி!

சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று காலை வௌிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார். வௌிவிவகார அமைச்சில் நடைபெற்ற...

வடமாகாணசபை உறுப்பினரின் வினோத போராட்டம்

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்த்து? குறித்த தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக்கேட்டு மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். மாகாண சபையின் 33 வது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை...

செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் வடமாகாணசபை அவதானம்

தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுவதனால், அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, வடமாகாண சபையின் உறுப்பினர் ஐயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிசையாக, அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதனால், அதனைத் தடுக்கும் வகையில்,...

அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று இல்லை

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்று செவ்வாய்க்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்த போதிலும், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாளை மறுதினம் வியாழக்கிழமையும் அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமையுமே புதிய அமைச்சரவை, பதவிப்பிரமாணம் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்களால் ஏற்படும் அங்கவீனங்கள் அதிகரித்து வரும் அபாயம்

வீதி விபத்துக்களில் சிக்குண்டு அங்கவீனமாவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்தார். கடந்த 1987 ஆம் ஆண்ட முதல்; 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 ஆயிரத்து 524 பேருக்கு செயற்கைக் கால்களும், 267 செயற்கை கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. மிதிவெடியில் சிக்கி...

காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன் : ரணில்

இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை  வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோருகின்றனரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில், 'காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தங்களது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை மீளக் குடியேற்றுவதே வடக்கு கிழக்கிலுள்ள...

மூன்று மகன்களை இழந்து தவிக்கும் தாய்!

தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை, மற்றைய மகனை தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொன்றார்கள், நான் தற்போது மூன்று பிள்ளைகள் இன்றி வாழ்கின்றேன் என கண்ணீருடன் வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த எஸ்.யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார். காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வின் மூன்றாவது நாள் விசாரணை...

இலங்கைக்காக குரல் கொடுக்கப் போவதாக டோனி பிளேயர் உறுதிமொழி

உலகில் இலங்கை தொடர்பில் காணப்படும் தவறான கருத்துக்களை களைய இலங்கை சார்பாக குரல் கொடுக்கப் போவதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள டோனி பிளேயர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். கடந்த பாராளுமன்றத்...

தமிழருக்கான தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்! – சம்பந்தன்

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அரசானது நிலையான அரசியல் தீர்வொன்றை வழங்க விரைவான செயற்பாடுகளில் இறங்குமென்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதி அந்தக் கைங்கரியத்தில் பின்நிற்கமாட்டார் என்றும் நம்புகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளையோ, வேறு எந்தப் பதவிகளையோ பெறப்போவதில்லை என்பதில் நாம் உறுதியுடையவர்களாக இருக்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
Loading posts...

All posts loaded

No more posts