Ad Widget

ஊர்வலத்துக்கு தடை கோரும் பொலிஸாரின் மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணம், திக்கம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை (26) நடத்தப்படவுள்ள ஊர்வலத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டது. பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திக்கம் பகுதியில் நாளை எதிர்ப்பு ஊர்வலமொன்று நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையிலேயே, பாதுகாப்பு காரணம் கொண்டு அவ்வூர்வலத்தை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால்...

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு ஆதரவாக கொழும்பில் அமைதி பிரார்த்தனை

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை போன்று மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி இன்று மாலை 6.30 அளவில் அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் நிகழ்வொன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. சிறுவர் விவகார இராஜாங்க...
Ad Widget

தாக்குதலுக்குள்ளான நீதிமன்றம் இராணுவத்தினரால் புனரமைப்பு

கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் பொருட்களை இராணுவத்தினர் புனரமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளனர். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நீதிமன்றத்தின் முன்னால் கூடியவர்களில் சிலர் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்தும் பூமரக்களை பிடுங்கி எறிந்தும் வாகனங்களை உடைத்தும் நீர்க்குழாய்களை உடைத்தும் அட்டகாசம் செய்தனர்....

பொலிஸார் மீது தாக்குதல்; பதிலுக்கு துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்!

வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மந்திகைக்கு மாற்றப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உடுத்துறை,...

யாழ். பொலிஸ் இடமாற்றத்தில் மஹிந்தவுக்கு சந்தேகம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண பொலிஸ் உயரதிகாரிகளின் இடமாற்றம் சந்தேகத்துக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எப்படித் தப்பிச் சென்றார்? தமிழ்மாறன் கேள்வி

புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் வி ரி தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை‬ பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு இருந்து வரும் அரசியல்...

கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி ஊடாக இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது கைதடி வீதியால் வந்த கனரக வாகனத்தோட கோப்பாய் சந்தியில் வைத்தே இவ்விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவர் தற்போது யாழ்.போதனா...

யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மத்திய பஸ் நிலையத்தில் பெண்கள் விடுதலை சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (23) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, யாழ் நகரப்பகுதிகளில் கவச வாகனங்கள் தரிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு...

கொக்குவிலில் ஆர்ப்பாட்டம்!!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் ‘பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின்’ ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கொக்குவிலில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையப் பகுதியில் நடைபெறும் என...

அரச பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

அரச பணியாளர்களின் சம்பளம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 2000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார். அரச பணியாளர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் ஒரு கட்டமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் வைத்து குறித்த விடயத்தை அறிவித்தார்.

யாழில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு

யாழ்.நகரில் இடம்பெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ். நகரில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன் எதிர்வரும் 14 நாள்களுக்கு எந்த அமைப்பும் யாழ். நகரத்தில் போராட்டங்களோ ஒன்றுகூடல்களையோ மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று போராட்டத்தினை மேற்கொள்வதற்கு என அறிவிக்கப்பட்ட...

நீதிமன்றம் மீதான தாக்குதல் இனவாதமல்ல

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலை இனவாதமாகக் கருதவில்லை. மக்களின் உணர்ச்சிவசப்பட்டே இந்த தாக்குதலை நடத்தினர். தென்னிலங்கை மக்களும் இதனை இனவாதத் தாக்குதலாகப் பார்க்க மாட்டார்கள். இனவாத எண்ணங்கள் அவர்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

இந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இளைஞன், கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 34 வயதுடையவர் எனவும் யாழ்ப்பாணம், சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர், கடந்த 18 ஆம் திகதி, போலி கடவுச்சீட்டை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2015ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பழைய அமைப்பின் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்களுக்கான ஏற்றுக்கொள்ளும் திகதி முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 3 அமைப்புகளுக்கு தடை

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய...

யாழில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை

யாழ்ப்பாணத்தில் எந்வொரு ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து யாழில் பதற்ற நிலை ஏற்பட்டது. கடந்த 20ம் திகதி மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது, மாணவியின் கொலைக்கு உரிய...

புங்குடுதீவு கொலை: வெளியாகிய புதிய தகவல்கள்

புங்குடுதீவில் மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.புங்குடுதீவு வேலனை பிரதேச சபையில் தண்ணீர் பவுஸர் ஓட்டுநராக இருந்த தாக கூறப்படும் குறித்த...

சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர் பொலிஸாரால் கைது!

அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர்...

கைதாகிய 129 பேர் தொடர்பில் முன்னிலையாகப்போவதில்லை என நாங்கள் தீர்மானிக்கவில்லை!

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 129 பேர் தொடர்பில் நீதிமன்றில் ஆயராகப் போவதில்லை என தாங்கள் தீர்மானிக்கவில்லை என வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழில் மாணவி...

நீதிமன்ற விவகாரம்; 129பேரும் அநுராதபுரம், வவுனியா சிறைகளுக்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை (20) நடைபெற்ற ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 129 பேரும், வவுனியா மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால் இவர்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். 129பேரும் 3 பஸ்களில் பவள் கவச வாகன பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts