- Monday
- September 22nd, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இம்முறை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி 3ம் திகதி...

தொழில் முயற்சிகளில் ஈடுபடவே நாங்கள் விரும்புகின்றோம். பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும் சுற்றுலாத்துறை போன்ற, எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்கு அமைவாக விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்....

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையோரமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய மண் அணை, கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்படுகின்றது. குறித்த பகுதி, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் படிப்படியாக மீள்குடியேறி வருகின்றனர். யுத்த காலத்தின் போது, இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு இரண்டு கிலோமீற்றர்...

இணையம் ஊடாக செய்யப்படும் தேர்தல் பரப்புரைகளை தடுக்க முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியுடன் அனைத்து தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது. எனினும் இணைய சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகளை தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முகநூல்...

கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை நடைபெற்றுகொண்டிருக்கின்ற பரீட்சை மத்தியநிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மத்தியநிலையமாக தொழிற்படும் மத்தியநிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரே இவ்வாறு அலைபேசியை எடுத்துச்சென்றுள்ளனர். அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி பரீட்சைகள் சட்டத்தின்...

கொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார பேரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பி வந்த சந்தேக நபர்கள் நால்வரும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வடமராட்சி...

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை (07.08.2015) மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. நேற்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்கள் யாழில் தொடர்ச்சியாகக் குறித்த விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . நேற்று மாலை கே.ஆர். சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கள இசையுடன் விழா...

அரசியல் வாதிகள் காலத்தின் தேவைகேற்ப தங்களை மாற்றி கொள்ளவேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது நீண்ட காலமாக அரசியல் வாதிகள் வெறுமனே எதிர் கட்சியையோ அல்லது கடந்த கால அரசாங்கத்தையோ குறை கூறுவதில் மட்டுமே தமது நேரத்தை செலவிடுகின்றனர்....

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த என்னை கொலையாளி என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பல உயிர்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட...

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். 'போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது...

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக 10 ஆவது தடவையாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, வியாழக்கிழமை (06) வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்....

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:- "நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்தது. வேறு எந்தவித...

"இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே...

மாவிட்டபுரம் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் ஆடிக் கார்த்திகை பெருவிழா இன்று (08) சனிக்கிழமை அதிகாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது. உசத் கால பூசையுடன் ஆரம்பமாகி இரவு 09 மணிவரை இப்பூசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அவ்வகையில், காலை 07 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும் விசேட மேளக்கச்சேரியும் நடைபெற்று, 08 மணிக்கு காலை சந்திப்பூசை விசேட மேளக் கச்சேரியும் 08.30...

அரசின் பொதுச் சேவை நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 7500 பட்டதாரிகளை உள்வாங்கி வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தகுந்த அமைச்சரவை அமைச்சர்களால் இது தொடர்பில் எடுக்கபட்ட முடிவுகளை தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் இந்த உள்வாங்கல்கள் இடம்பெறவுள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவது தொடர்பில் வௌியிட்ட அறிக்கையில்...

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக கூறி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் செல்வந்தர்கள் வரி அறவிடுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். உயர் வருமானம் பெறக்...

தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல், தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடைபெறப்போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும். எமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மீண்டும் ஒருவாய்ப்புக் கிடைத்துள்ளது. ...

'நாய்க்கு கல்லெறிந்தால் அது காலைத் தூக்குவது போல, எதைச் செய்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்குள் இனவாதத்தை கொண்டுவருகின்றார்' என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...

All posts loaded
No more posts