Ad Widget

கொக்குவிலில் ஆர்ப்பாட்டம்!!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் ‘பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின்’ ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கொக்குவிலில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையப் பகுதியில் நடைபெறும் என...

அரச பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

அரச பணியாளர்களின் சம்பளம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 2000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார். அரச பணியாளர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் ஒரு கட்டமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் வைத்து குறித்த விடயத்தை அறிவித்தார்.
Ad Widget

யாழில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு

யாழ்.நகரில் இடம்பெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ். நகரில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன் எதிர்வரும் 14 நாள்களுக்கு எந்த அமைப்பும் யாழ். நகரத்தில் போராட்டங்களோ ஒன்றுகூடல்களையோ மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று போராட்டத்தினை மேற்கொள்வதற்கு என அறிவிக்கப்பட்ட...

நீதிமன்றம் மீதான தாக்குதல் இனவாதமல்ல

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலை இனவாதமாகக் கருதவில்லை. மக்களின் உணர்ச்சிவசப்பட்டே இந்த தாக்குதலை நடத்தினர். தென்னிலங்கை மக்களும் இதனை இனவாதத் தாக்குதலாகப் பார்க்க மாட்டார்கள். இனவாத எண்ணங்கள் அவர்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

இந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இளைஞன், கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 34 வயதுடையவர் எனவும் யாழ்ப்பாணம், சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர், கடந்த 18 ஆம் திகதி, போலி கடவுச்சீட்டை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2015ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பழைய அமைப்பின் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்களுக்கான ஏற்றுக்கொள்ளும் திகதி முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 3 அமைப்புகளுக்கு தடை

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய...

யாழில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை

யாழ்ப்பாணத்தில் எந்வொரு ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து யாழில் பதற்ற நிலை ஏற்பட்டது. கடந்த 20ம் திகதி மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது, மாணவியின் கொலைக்கு உரிய...

புங்குடுதீவு கொலை: வெளியாகிய புதிய தகவல்கள்

புங்குடுதீவில் மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.புங்குடுதீவு வேலனை பிரதேச சபையில் தண்ணீர் பவுஸர் ஓட்டுநராக இருந்த தாக கூறப்படும் குறித்த...

சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர் பொலிஸாரால் கைது!

அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர்...

கைதாகிய 129 பேர் தொடர்பில் முன்னிலையாகப்போவதில்லை என நாங்கள் தீர்மானிக்கவில்லை!

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 129 பேர் தொடர்பில் நீதிமன்றில் ஆயராகப் போவதில்லை என தாங்கள் தீர்மானிக்கவில்லை என வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழில் மாணவி...

நீதிமன்ற விவகாரம்; 129பேரும் அநுராதபுரம், வவுனியா சிறைகளுக்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை (20) நடைபெற்ற ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 129 பேரும், வவுனியா மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால் இவர்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். 129பேரும் 3 பஸ்களில் பவள் கவச வாகன பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தின்...

வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட சுவிஸ் பிரஜை எவ்வாறு கைதானார் : விளக்குகின்றார் துவாரகேஸ்வரன்

புங்குடுதீவில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட நபர்களில் முதலில் மூன்று சகோதரர்கள் கைதானார்கள். அவர்களைத்தொடர்ந்து சுவிஸ் பிரஜை உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு தற்போது பொலிசாரின் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுவிஸ் பிரஜையான மகாலிங்கம் சசிகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து...

தாக்குதலுக்குள்ளான நீதிமன்றத்தை பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பார்வையிட்டார்

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (20) குழப்பம் விளைவித்தவர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் வெள்ளிக்கிழமை (22) பார்வையிட்டார். நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் வந்திருந்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர் எனக்கருதிய சிலர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு...

யாழ்.மக்களிற்கு பொலிஸ் திணைக்களம் விடுத்த விசேட செய்தி!

புங்­குடுதீவு மாணவி வித்தியா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் இது வரை கைது செய்­யப்­பட்­டுள்ள ஒன்­பது சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அவர்­களில் எவரும் தப்­பிக்க முடி­யாது. பொலிஸ் மா அதி­பரின் நேரடி கட்­டுப்­பாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் சந்­தேக நபர்கள் தப்­பிக்­கவே முடி­யாது. சட்டம்...

வேலணையில் இளம்பெண்ணை காணவில்லை!

வேலணைப் பகுதியில் இளம் பெண்ணொருவரைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவுவரை வீடுதிரும்பாததை அடுத்து நேற்றிரவு அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 மட்டக்களப்பில் ஹர்த்தால்

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கடைகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பொதுச்சந்தை, அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களும் குறைவாக உள்ளன.

துண்டிக்கப்பட்ட கைவிரலை விட்டு ஒருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் சிக்கிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு முன்னர் பாதுகாப்பு கருதி போடப்பட்ட இரும்பு கம்பிக்குள் அகப்பட்ட நிலையிலேயே விரல் நுனி மீட்கப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கு

யாழ். வடமராட்சி கரணவாய் வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வதரி துலாக்கட்டு வீதியில் உள்ள மின் கம்பம் நேற்று காலை 10.00 மணி அளவில் சரிந்து விழுந்த நிலையில் இவ் வீதியால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. இவ்விடயத்தினை அப் பகுதி மக்கள் உடனடியாக கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்தல்...

புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு ஒப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது.என்றார் அவர்,யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழுவினர் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்....
Loading posts...

All posts loaded

No more posts