யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் 1032 வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளன.விவசாயம்,மீன்பிடி,கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 75,000ரூபா பெறுமதியான...

UNHCR நிறுவனத்தினால் அவசர பொதிகள் கையளிப்பு

வீடுகளில் துன்புறுதல், முறையற்ற குழந்தை பிரசவம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படும் பெண்களிற்கு தேவையான அடிப்படை பொருட்களடங்கிய அவசர பொதிகளை வழங்க UNHCR நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பொதியும் ரூபா 2000 பெறுமதியான பொருட்களென 75 பொதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் குறித்த நிறுவனத்தினால் அண்மையில்...
Ad Widget

தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்!- யாழில் சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்றய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். இந்த...

யாழ் நாச்சிமார் கோயிலடியில் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மாலை 4.00 மணிக்கு தொடக்கி நடை பெற்றது. இதில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பெருந்திரளானமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் 90 விழுக்காடு சிங்களவர்கள் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

மத்திய அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில் வடக்கில் 90 விழுக்காடு சிங்களவர்களே இடம்பெற்றிருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். இந்நியமனங்கள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மூன்று...

கூட்டமைப்பின் நெல்லியடிக் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய துண்டுப்பிரசுரம்!

நெல்லியடியில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இனந்தெரியாத- மர்ம நபர்கள் சிலரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களால் பரபரப்பு ஏற்பட்டது. வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தேசியத் தலைவரின் மண்ணில் தேசத்துரோகியா என்று தலைப்பிடப்பட்டு இரண்டு பக்கங்களிலும் பல்வேறு விடயங்கள் அச்சிடப்பட்டிருந்தன. வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், யாழ்ப்பாணம் என்ற பெயரில்...

வீதிகளில் சின்னங்கள், விருப்பிலக்கங்களை பொறித்தால் நடவடிக்கை

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் வர்ணப்பூச்சுக்களால் வீதிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களுடைய விருப்பிலக்கங்களை பொறிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். மாவட்டத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை...

புலிகளை வைத்து வாக்குப்பிச்சை வாங்கவில்லை – அங்கஜன்

மற்றவர்களைப் போன்று நான் தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்து வாக்குப்பிச்சை வாங்கவில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. அன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்ன விடயங்கள் இன்று இல்லை என்பதை மட்டுமே கூறுகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் காணொளியில் சந்தேகம் – சுமந்திரன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் காணொளியில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மக்களோடு மக்களாக செயற்படுவதில்லை, தமது குடும்பங்களை இந்தியாவில் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) வெளியாகியூள்ளது. இதுதொடர்பில்...

வவுனியா மாணவியின் இறுதி ஊர்வலத்தின் போது பொலிஸார் – பொதுமக்கள் இடையே முறுகல்!

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் சடலம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட போது பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்கமைய அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்று இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. வவுனியா, பண்டாரிகுளம் விபுலானந்த கல்லூரியைச் சேர்ந்த குணசேகரம் திவ்வியா (வயது 19) என்ற மாணவி கணித...

நீதிமன்றப் பிடியாணையில் தேடப்படும் நபர்களை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு!

குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தினால் தேடப்படும் நபர்கள், நீதித்துறை நீதிமன்ற பிடியாணையில் தேடப்படும் நபர்கள் தேர்தல் வன்முறையில் ஈடுபடக்கூடும். அதனை அனுமதிக்க முடியாது. அத்தகைய நபர்களை உடன் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன், இவ்வாறு தேடப்படுபவர்கள் அண்மையில் உள்ள நீதிமன்றங்களில் உடனடியாக சரணடைய வேண்டும் என கஞ்சா தண்டனைக் குறைப்பு வழக்கொன்றில் அளித்துள்ள...

பதினெட்டு வயதுக்குக் குறைந்த தாலித் திருமணம் சட்டப்படி செல்லுபடியற்றது

கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது...

யுத்தத்தின் பின்னர் எவரும் பிரிவினையைக் கோரவில்லை!

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய...

கருணாவால் மக்கள் ஆதரவு குறையுமே தவிர கூடாது!

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருப்பதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறையுமே தவிர அதிகரிக்காது என, பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.அரியநேத்திரன் மேலும் கூறியதாவது, முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டு...

விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் நிதி – மஹிந்தவுக்கு சம்பிக்க சவால்

மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க உரையாடல் மேற்கொள்ள வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தமைக்கான அனைத்து தகவல்களும் வௌிவந்துள்ளதாகவும் விரைவில் இது...

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாதாம்!

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ஷ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும், அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதி எவரும் சிறைகளில் இல்லை எனவும் அவர்...

புலம்பெயர்ந்த மக்களும் ஊடகங்களுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோள்!

தேர்தலுக்கு இன்னும் ஒருகிழமை இருக்கும் நிலையில் பல பொய்கள், பலவிதமான சதிகள், எங்களுடைய வெற்றிய மட்டுபடுதுவதற்கு முன்னெடுக்கப்படும் அதனை முறியடிப்பதற்கும் எங்களுடைய மக்களை சரியான ஒரு திசையில் வைத்திருபத்தற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஊடகங்களும் கணிசனமான பங்களிப்பை எமக்கு செய்ய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. விசாரணை ஆவணம் திரிபுபடுத்தப்பட்டதல்ல! – கெலும் மைக்ரே விளக்கம்

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான - கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தெரிவித்துள்ளார். அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கெலும் மைக்ரே மறுத்துள்ளார். 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தின்...

போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தமிழர் தீர்வை விரைந்து பெற வீட்டுக்கு வாக்களியுங்கள்!

ராஜபக்‌ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஓகஸ்ட் 17...

வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்

வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு கடந்த காலங்களில் அபராதம் விதிக்கப்படாமைக்கான காரணம், 298/2005 என்ற வழக்கின் படி, அதிகமான பாதைகளில் வேக எல்லைகள் சரியான முறையில்...
Loading posts...

All posts loaded

No more posts