Ad Widget

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – கருணா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,“கடந்த அதிபர் தேர்தலில்...

சிங்களதேசதேசத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தமிழ்த்தேசிய அவை நிறுவப்படும்! வி- மணிவண்ணன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர்  திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும். அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும்.என அவர்...
Ad Widget

குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். அரசியல் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகள், வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக இப்போதிருந்தே...

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும்: – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் திருமதி பத்மினி சிதம்பரநாதன்...

சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் குறித்து அதிக முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தல் தொடர்பில் 304 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகப்படியான 118 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள்...

கஞ்சா விற்க முற்பட்ட இருவர் கைது

பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா...

பிரேமதாஸ மைதான வன்முறை: நால்வர் கைது

கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள்...

யாழில். 15 ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால்...

தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக வழக்கை தொடர்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரும்...

கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

தேசிய அபிவிருத்தி நிலையத்தில் பிராந்திய நிலையங்கள் மூலம் "முதியோர் பராமரிப்பு டிப்ளோமா" "சமூக பராமரிப்பு டிப்ளோமா"கற்கை நெறிகளை பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி பாடநெறிக்கான வகுப்புக்கள் வாராந்தம் சனி ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக பதிவாளர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 488A, நாவல...

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை உருத்திரபுரம் பிரதேசத்தின் வயல் பகுதியில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சடலத்தின் பெரும் பகுதி அலுகிய நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 21ம் திகதி காணாமல் போன குறித்த...

வலி.வடக்கு விடயம்; இராணுவத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம்

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட பாதைகளை விடுவிக்க மற்றும் எஞ்சிய காணிகளை விடுவித்தல் தெடர்பான விடயங்களில் இராணுவத்தினர் விடாப்பிடியான நிலைப்பாடு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்த குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி வரவேற்றார். இதன்பின்னர் முப்படைத்தளபதிகள் ,...

உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன. லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாவலனது பூதவுடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும்...

யாழில் மின்கம்பத்துடன் மோதிய வாகனம் – 14 பேர் காயம்

கன்டர் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிலர் கிளிநொச்சியில் கொங்கிறீற் வேலை...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்! மஹிந்த

புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். குளியாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பதாக கூறிய போதும் 7000...

மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரள்வு

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. மதவாச்சியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டம் திருகோணலையில் நடந்தேறியது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப்பணியகம் சனிக்கி்ழமை (18) திறந்துவைக்கப்பட்டதோடு திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.திருகோணமலை திருஞானசம்பந்தன் வீதியில் அமைந்துள்ள நடுவப்பணியகத்தை தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருமலை மாவட்டமுதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் திருமலை லட்சுமி நாராணயன் கோயில்உரிமையாளர் ராதாகிஸ்ணன் ஆகியோர்...

இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை- வடமாகாண முதலமைச்சர் லண்டனில் உரை

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய  வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன் இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை என்று கூறிய அதேவளை கூட்டமைப்பினை தனது உரையில் கடுமையாக சாடினார். உரையின் முழு வடிவம் அமெரிக்க பயணத்தின்...

கீரிமலை கடலில் தோன்றிய பிள்ளையார் சிலை

யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது. எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த சிலை ஒரு...

யாழில் புனித ரமழானை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள்

புனித நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்ற முகமதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதான இமாம் எம்.ஐ மஹமூட் பலாஹி விசேட சொற்பொழிவை ஆற்றினார். இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Loading posts...

All posts loaded

No more posts