- Thursday
- May 2nd, 2024
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. இந்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள் பங்கேற்றன....
நோன்பின் மூலம் மனித உள்ளங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி புகட்டப் படுவதாக நோன்பு பொருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இன்றைய தினத்தில் ஈதுல் பித்ர் பண்டிகையை கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் அனைத்துலக முஸ்லிம் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த மாதமானது நோன்பு,...
பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம் நடைபெறும் தேரதல் அல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே...
மக்கள் என்னுடன் இருக்கும் வரை எவருடைய குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளிக்கப் போவதில்லை. மக்கள் அதற்கு பதில் அளிப்பர் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...
மீள்குடியமர்வு தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸநாயக்க இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார். வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த மாதத்தின் இறுதியில், மீள்குடியேற்ற அமைச்சர் யாழ். வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள்...
முன்னாள் போராளிகளின் (ஜனநாயகப் போராளிகள் அமைப்பின்) தலமை வேட்பாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான (அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது நான் இப்போ ஊடகவியலாளன் அல்ல என கூறினார்) ந. வித்தியாதரன் யாழ் ஊடகங்களை மாபியா என குறிப்பிட்டு உள்ளதுடன் உதயன் பத்திரிகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி எவ்.ரீ...
"பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயுதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும் - தீர்வைப் பெற்றுக்...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகெண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேன்ட் வர்க்க மசகு எண்ணெய் 57 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய், கேஸ், தங்கம், வெள்ளி என்பவற்றின் விலை...
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8...
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சினால் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இது பல்வேறு மட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில பாடசாலைகளின் அதிபர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக...
நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள மாரி திரைப்படத்தை தடை செய்யக் கோரி நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர். மாரி திரைப்படம் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தே நேற்றய தினம் குறித்த ஆர்ப்பாட்டம்...
நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறை, மலசலகூட அறைக்கதவு ஆகியவற்றை உடைத்த 28 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதிநந்த சேகரம், வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார். நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலையத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை (14), மதுபோதையில் வந்த குறித்த நபர்...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வந்த 35 சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த 35 சுகாதார தொண்டர்கள் 2014 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் ஒப்பந்த கால அடிப்படையில் தெல்லிப்பழை ஆதார...
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....
யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டடத்தை தாதியர் விடுதியாக பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1750 உறுப்பினர்களைக் கொண்ட பணியாளர் தொகுதியைக் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றது. இவர்களுள் 407 பேர்...
நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே 'ஆணையாளருக்குக் கூறுங்கள்' என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும்...
ஜனாதிபதியின் போதையற்ற தேசம் என்ற சிந்தனைக்கமைய வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அமைச்சானாது விசேட செயற்திட்டம் ஒன்றை பாடசாலை மாணவர்களிடத்தில் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட போதைப்பொருள் விழிப்புனர்வு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. வடமாகாண புனர்வாழ்வு இணைப்பு காரியாலயத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...
இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து...
Loading posts...
All posts loaded
No more posts