- Friday
- May 17th, 2024
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர்...
வட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன், எம்.கே. சிவாஜிலிங்கம், இ.அங்கஜன், ஜயதிலக ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஐந்து பேர் தற்போதைக்கு விடுப்பு பெற்றுள்ளனர். ஆனால் சிவாஜிலிங்கம் மாத்திரம்...
பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது அரசாங்கத்தினால் ஆரம்பித்து இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த...
கண்டி, கட்டுகஸ்தோட்டை மஹியாவை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த காரியாலயத்தின் பதாதைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை யாரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகபேச்சாளர் நிலையம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது. சம்பவம்...
75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது. ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர...
தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே நேற்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கங்கைகொண்டான் கலைஞர் காலனியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தியாகராஜன் (42வயது), சசிகுமார் (38 வயது)...
மாத்தறை - அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரோஹான் வெலிவிட தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தவறான விளக்கம் வழங்கப்படுவதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக...
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், பிரதி வடமாகாண முதலமைச்சர் குருகுலராஜா உள்ளிட்ட பலரையும் சந்தித்திருக்கின்றனர். அத்துடன் சிவில் சமூசத்தின் பலதரப்பட்டவர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச்...
தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும், எங்கள் தேவைகளையும் பெற்றுக் கொள்வோம் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை மாலை யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போதே...
கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்றய தினம் (21) இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஜனநாயக...
மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அகுரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஆதரவாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் கையினைப் பிடிக்க முற்பட்ட போது,...
கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் இருந்து வரும் இரண்டு சந்தேக நபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து கட்டளை பிறப்பித்துள்ளார். சின்னத்தம்பி திருச்செல்வம் என்ற நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்...
வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - சட்டவிரோதக் கருக்கலைப்புச் செய்தபோது ஏற்பட்ட அதிகரித்த இரத்த போக்கு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்....
மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, யாழ். பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். யாழ். நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் யூட் றொசான் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த மாதம் 15ம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஊசி போடுவதற்காக பெற்றோருடன் சென்ற நபர்,...
மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திர வர்த்த வலையங்கள் அமைத்து நகரங்களில் தொழில்பேட்டை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். - இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நகர பஸ்நிலையம் முன்பாக நடைபெற்றது....
மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த படையினர் மூவரும் நீதிமன்றினால் நேற்றுமாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும்...
இந்த நாட்டை ஆள மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:- நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெற்றிகொண்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்...
Loading posts...
All posts loaded
No more posts