Ad Widget

பருத்தித்துறைக் கடற்பரப்பில் 9 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் குறித்த மீனவர்களையும் கைது செய்தததோடு அவர்களின் படகினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசந்துறை கடற்படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களை யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts