- Sunday
- February 22nd, 2026
மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலன் லோரன்ஸ் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ....
வல்வெட்டித்துறைப் பகுதியில் குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் தாயாருடன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற தாபரிப்பு, தொடர்பான விசாரணைக்கு தாயாருடன் வந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை, வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல்...
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு கருணா நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவிற்கு தெரிந்தே ரவிராஜ் கொலை மேற்கொள்ளப்பட்டது என புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது. குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள்...
"அரசு தம்மை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில்", உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை...
பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்கள் அதிகளவான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களே அதிகளவான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றவர்களாகவும் உள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். வடமாகாண தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சிறுவர் தொழிலாளர்கள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற நடைபவனி மற்றும் மானிப்பாய்...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, கிராம அலுவலர்களை பொலிஸ் கடமை புரியும் அதிகாரிகளாக நியமனம் செய்யுமாறு அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையையடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...
நாடுமுழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தைக் கைவிடவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று மகஸின் சிறைக்கைதிகள் முன்னிலையில் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் விஜயதாஸ...
இலங்கையில் இருந்து சிறுவர் தொழிலை இல்லாதொழிப்போம்´ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்று காலை ஆரம்பமானது. வணிகர் கழக கட்டிடத்தில் நிறைவடைந்த நடைபவனியைத் தொடர்ந்து சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வும் ஒன்றுகூடல் வைபவமும் யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது....
சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(15-10-2015) யாழ் பஸ் நிலையம் முன்பாக காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அக் கட்சியின் வடமாகாண இணைப்பாளர்...
இலங்கை வங்கியில் கீழ்வரும் விளம்பரத்தில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 26.10.2015. முழுமையான விபரங்களை விளம்பரத்தில் பார்க்கவும். சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவி தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவிக்கு தகைமையுடையோரிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 23.10.2015. வயதெல்லை : 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகைமை :...
அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் நெஞ்சை உலுக்கியது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல் வாதிகள் சிவில்...
கோப்பாய் பொலிஸாரின் செயற்பாட்டை விசாரணை செய்யக்கோரி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று முன்தினம் யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் நிகழும் சம்பவங்களின் வழக்கு விசாரணை அறிக்கைகள் திருப்தி இல்லை எனவும் அத்துடன்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது...
தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக...
ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 21பேர் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலையில் நேற்று முன்தினம் கற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஒவ்வாமை நோயால் உடம்பில் ஏற்பட்ட தடிப்பு, கடி, சொறி காரணமாக மாணவர்கள் அவதியுற்றனர். இதனை அடுத்து இவ்வாறு பாதிக்கப்பட்ட 21 மாணவர் கள் வைத்தியசாலையில்...
ஜனாதிபதி செயலகத்தினால் எனது வீட்டை மீட்பது தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நான் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றேன். இவ்வாறு மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியினர் அபகரித்துள்ள எனது வீட்டைப் பெற்றுத்தாருங்கள் எனச்சகல ஆவணங்களுடனும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலா...
குடிமனைகளிலிருந்து அகற்றப்படும் குப்பைகளில் உக்கக்கூடிய குப்பைகள் தவிர்ந்து ஏனைய குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பைகளை, நல்லூர் பிரதேச சபை நிர்வாகம், குடியிருப்பாளர்களுக்கு புதன்கிழமை (14) முதல் வழங்கி வருகின்றது. கண்ணாடிப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தகரம் என குப்பைகளை மூன்று வகையாகப்பிரித்து அவற்றை போடுவதற்காக தனித்தனியான பைகள் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு...
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது, அரசியல் இலாபத்துக்காகவும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என யாழ்ப்பாண சாலை காப்பாளர் ஜெ.அன்ரன்மயூரன் தெரிவித்தார். யாழ்.சாலை முகாமையாளர் அநீதியாக செயற்படுவதாக கூறி, கட்சிகள் சார்ந்த ஊழியர் சங்கங்கள் இணைந்து முகாமையாளருக்கு எதிராக போராட்டம் ஒன்றை புதன்கிழமை (14) நடத்தின. இந்தப்...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன்,...
Loading posts...
All posts loaded
No more posts
