Ad Widget

பாலியல் குற்றச்சாட்டு : யாழ். இராமநாதன் நுண்கலைப்பீட துறைத் தலைவர் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது.

குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முறையிடப்பட்டிருந்தன. அதையடுத்து முன்னொரு தடவை குறித்த துறைத்தலைவர் நிர்வாகத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவர் மீதான மாணவிகளின் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தமையால் இந்த விடயத்தை பேரவை கவனத்தில் எடுத்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்து வதற்காக அவரைச் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.

அதேவேளை, முன்னரும் யாழ். பல்கலைக் கழகப்பேராசிரியர் ஒருவரும் இதேபோன்று பாலியல் முறைகேடு காரணமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

Related Posts