Ad Widget

யாழில் சிறுவர் தொழிலை இல்லாதொழிப்பதற்கான நடைபவனி

இலங்கையில் இருந்து சிறுவர் தொழிலை இல்லாதொழிப்போம்´ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்று காலை ஆரம்பமானது.

வணிகர் கழக கட்டிடத்தில் நிறைவடைந்த நடைபவனியைத் தொடர்ந்து சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வும் ஒன்றுகூடல் வைபவமும் யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

2016 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல் எனும் செயற்றிட்டம் இவ்வருடம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் செல்வி எஸ். தனுசியா தெரிவித்தார்

event-15-10-2015-1

event-15-10-2015-2

Related Posts