Ad Widget

கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்திய மீனவர்கள் 04 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை மாதகல், வலித்தூண்டல் கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராமநாதபுரம், கோலியக்கரையைச் சேர்ந்தவர்களான குஞ்சப்பன் பாலசுப்பிரமணியம் (வயது 60), கணேசன் இராஜகண்ணா (வயது 55), மணிவண்ணன் வீரமணி (வயது 30), பழனித்துரை செல்வன் (வயது 28) ஆகியோரே கரையொதுங்கினர்.

இவர்களின் மீன்பிடி இயந்திரம் பழுதடைந்த நிலையில், காற்றுக்கு அள்ளுப்பட்டு இவர்கள் கரையொதுங்கினர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts