Ad Widget

பெண்கள் காப்பகக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது

அச்சுவேலி அரச சான்று பெற்ற பாடசாலையில் மகளிர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக் கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், 11 அறைகள், மருத்துவ அறை, தொழிற்பயிற்சி வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் காப்பகத்தில் சிறுவயதுக் கர்ப்பமடைந்த சிறுமிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இன்றைய திறப்பு விழா நிகழ்வு நன்னடத்தை பாடசாலை அதிபர் வல்லிபுரம் விக்கினராஜா தலைமையில் நடைபெற்றது.

Related Posts