தமிழினியின் இறுதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில்...

பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது!! : முன்னாள் ரா அதிகாரியின் கூற்றால் பரபரப்பு!!

இலங்கை யுத்தம் முடிந்த நிலையில், பிரபாகரன் இறந்து விட்டதாக காட்டப்பட்ட உடல் உண்மையில் அவருடையது இல்லை என்றும், பிரபாகரன் உயியோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், இந்திய ரா முன்னாள் அதிகாரியும், கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார். அதில்...
Ad Widget

மற்றுமோர் முன்னாள் போராளி திடீர் மரணம்!! அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளி ஒருவர் திடீரெ மரணித்துள்ளமை குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தயாரான 29 வயதான சசிதரன் தாரிகா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துப் பிரிவு முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தில் பலத்த காயமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த...

யாழில் போதை விழிப்புணர்வு பேரணி

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நேற்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வினை மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் ஆரம்பித்து வைத்தார். புகையிலை மது மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனைகளினால் ஏற்படும் விளைவுகளை...

யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல்

குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி, வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனால் குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது...

மின்சாரத்தை பெற்று தருமாறு வளலாய் பகுதி மக்கள் கோரிக்கை

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதி மக்கள் மின்சாரவசதி இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். 333 குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்துள்ள நிலையில் 64 குடும்பங்கள் நிரந்தமாக குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தாம் மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட் வில்லை என...

மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் கொள்ளை

மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் 18ஆம் திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்துவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பொருட்களை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில், குருக்கள்...

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்

இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள்...

ரவிராஜ் கொலை வழக்கு: 5 கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர் என சந்தேகநபர்கள் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீலால் தன்தெனிய தெரிவித்தார். ரவிராஜ் கொலை சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட...

பாலியல் இலஞ்சம் கோரியமைக்கு நம்பத்தகு ஆதாரங்கள் இல்லையாம்!

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...

தமிழினி மறைவுக்கு கருணாநிதி இரங்கள்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராக செயல்பட்ட போராளி தமிழினி, புற்றுநோய்க் கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார் என்று செய்தி...

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது

நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக்...

தமிழினி அவர்களது புகழுடலுக்கு ஸ்ரீஞானேஸ்வரன் , அண்ணாத்துரை அஞ்சலி ( இறுதிஊர்வல படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட தலைவர் திரு ஸ்ரீஞானேஸ்வரன் திருமதி சிறீஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார பொறுப்பாளர் திரு அண்ணாத்துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். நேற்று காலை பரந்தன் சிவபுரத்தில் தமிழினி அவர்களது புகழுடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ்விலும் பங்குபற்றியிருந்தனர். இறுதி...

பெண் தலைமைத்துவத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தமிழினி – முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்ட ஒரு ஜீவன் எம்மை விட்டு ஏகிவிட்டது. புற்றுநோய்த் தாக்கத்தினால் உயிர்துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகால மரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும். என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சகோதரி தமிழினி அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகச்...

சனல்-4 வீடியோக்களில் உண்மைத் தன்மை உண்டு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரிட்டனைச் சேர்ந்த "சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட, "நோபயர் சூன்' (போர் தவிர்ப்பு வலயம்) ஆவணப்படத்தில் காணப்படும் காட்சிகளில் உண்மைத்தன்மை இருக்கலாம் என்று மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரின்போது காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால...

போர்க்குற்றவாளிகளுக்கு உள்நாட்டு சட்டக்கட்டமைப்பின் கீழ் தண்டனை!

இறுதிக்கட்டச் சமரின்போது போர்விதிகளை மீறிய படையினருக்கு எதிராக உள்ளக சட்டக்கட்டமைப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இறுதிப்போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை...

வடபகுதியில் காணாமல்போன ஊடகவியாளர்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியாளர் ம. நிமலராஜன் அவர்களின் 15 ஆவது ஆண்டின் நினைவு தின நிகழ்வுகள் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர்கள், நிமலராஜனின் ஊடக உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, வடபகுதியில் கொலை செய்யப்பட்ட, மற்றும் காணாமல் போன ஊடகவியாளர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என...

தமிழகத்தில் கரை ஒதுங்கிய படகில் சென்றவர்கள் இலங்கை அகதிகளா?

இராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த பைபர்கிளாஸ் படகு ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன் கரை ஒதுங்கியது. இந்த படகில் ஆட்கள் யாரும் வந்தார்களா என்பது குறித்து, இந்தியப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழக மரைன் பொலிஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு, நேற்று இராமேஸ்வரம் சென்றார். சங்குமால்...

67 தமிழ் அரசியல் கைதிகள் இவ்வார இறுதிக்குள் விடுதலை?

விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 தமிழ் அரசியல் கைதிகளை இவ்வார இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, இதுவரை காலமும் வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையே இந்த வாரம் விடுவிக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் குறித்தும் விசாரணையை...

“பாலியல் தொழிலுக்கு, அங்கீகாரம் வழங்குங்கள்”

பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஊடக சந்திப்பு (கொழும்பு) ஒன்றில் அவர்கள் நேற்று (19) தமது கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த அமைப்பின் இணை தலைவரான பி...
Loading posts...

All posts loaded

No more posts