Ad Widget

இராணுவத்தினரின் வளர்ப்பு பன்றி தாக்கி ஒருவர் வைத்தியசாலையில்

அல்வாய் வடமேற்கு, பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் வளர்ப்பு பன்றி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திங்கட்கிழமை (02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நடேசு சிவரத்தினம் (வயது 55) என்ற நபரே பன்றியின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அப் பகுதியினை சேர்ந்த குறித்த நபர், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள தனது காணிக்குள் விறகு பொறுக்கி கொண்டிருந்த போது, பன்றி இவரை தாக்கியுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அயலவர்களின் உதவியுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts