Ad Widget

கட்டடங்கள் மட்டும் எஞ்சியுள்ள மகேஸ்வரனின் குடியேற்றத்திட்டம்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனால் கல்லுண்டாய்வெளியில் நிர்மாணிக்கப்பட்ட குடியேற்றத்திட்ட வீடுகளின் கூரைகள் அனைத்து திருடப்பட்டு தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சிய நிலையில் உள்ளது. இந்துக் கலாசார அமைச்சராக மகேஸ்வரன் பதவி வகித்திருந்த காலப்பகுதியில், யாழ். நகரில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாமல் இருந்த குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்காக கல்லுண்டாய்வெளியில் 25 வீடுகளை...

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் இசைக் கச்சேரி மூலம் தேர்தல் பிரசாரம்!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் கட்சிகள் இந்தியாவின் தேர்தல் பிரசாரங்களைப் பின்பற்றி, இசைக் கச்சேரிகள் நடத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்;ப்பாணம் வருகை தந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார நிகழ்வில், இந்தியாவில் பிரசித்திபெற்ற சுப்பர்...
Ad Widget

 உங்களுக்கு தெரியுமா? தகவல் தருமாறு கோரிக்கை

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் இலக்கம் 90/7 கடவத்தை வீதி, தெஹிவளை எனும் முகவரியைச் சேர்ந்த வெலே சுதா என்று அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமாராவுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். போதைப்பொருள் வியாபாரம் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை சேகரித்த வெலே சுதாவின்...

கூடப்பிறந்த சகோதரியை வல்லுறவுக்கு உட்படுத்திய சகோதரனுக்கு 5 வருட கடூழியச் சிறை

சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் சகோதரனுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த மஹிந்த முயற்சி! – அமைச்சர் கயந்த சுட்டிக்காட்டு

"கடந்த காலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்." - இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக. ஐக்கிய தேசியக் கட்சியின் தலையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அவர்...

யாழ்ப்பாணத்தில் அச்சத்துடனே வாழ்கிறோம்! சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்!! – நயினை விகாராதிபதி

யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கைகோர்த்தன....

சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் – தந்தை தீக்குளிப்பு

கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், 16 வயதுடைய சிறுமியும் காணாமற் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம்...

நாட்டை பிரித்து வேறுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை

நாட்டை விரும்பாத டொலர்களுக்கு வேலை செய்யும் சிவில் அமைப்புகளுக்கு மத்தியில் உண்மையில் நாட்டை நேசிக்கும் தேசிய அமைப்பு இருப்பது மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே...

பெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்கம்

இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் எனப்படும் இந்த தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியுள்ளவர்களில் ஒருவரான பத்மினி விஜயசூரிய தெரிவித்தார். நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சங்கங்கள் பெண்களின்...

முதல்வர் சி.வி கூட்டமைப்பில் விசனம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன என்ன என்பதை அப்பட்டமாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர். நான் இவற்றைச் சொன்னால் பெரும் பிரச்சனை ஆகிவிடும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இதை வெளிப்படுத்தாமல் இருக்க...

தமிழ்த் தேசிய அங்கீகாரமே பிரச்சினைகளுக்குத் தீர்வு! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்

தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்ற 4 விடயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், போர் நிறைவடைந்த பின்னரும் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை சிதைப்பதற்காக, தேசத்தின் அங்கீ காரத்திற்கு அடிப்படையான விடயங்கள் மீதான கட்டமைப்புசார் இன அழிப்பு நன்கு திட்டமிட்டவகையில்...

சமுர்த்தியில் மோசடி : மனித உரிமை ஆணைக்குழுவில் மனு கையளிப்பு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகர் பிரிவிலுள்ள ஜே.61 தொடக்கம் ஜே.74 கிராமசேவையாளர் பிரிவு மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில், நான்காயிரம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் உடைய தமக்கு ஏற்கனவே சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது . எனினும் மீளாய்வின் பின்னர் எமக்கு சமுர்த்தி...

தபால் மூல வாக்களிப்பு யாழில் தீவிரம்

ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. அதன்படி, பொலிஸ் நிலையங்களிலும் வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் இன்று தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. குறித்த தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. தபால் மூல வாக்காளர்களின் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில்...

வடக்கை எமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும்

பிரபாகரன் யுத்தத்தின் மூலம் அடைய நினைத்ததை இன்று அரசியலின் ஊடாக புலிகள் அடைய முயற்சிக்கின்றனர். நாம் முடித்து வைத்த ஆயுத கலாசாரத்தையும் அவர்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எழுதிய 'யுத்தம் இல்லாத நாடு -...

முகமாலை,இத்தாவில் பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட காணிகளில் மிள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில் ஆகிய பகுதிகளில் ஏ-9 வீதிக்கு வடக்கேயுள்ள வெடிபொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி அறிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, பச்சிலைப்பள்ளி...

குருநகரில் ஆணின் சடலம்! – கொலையா என விசாரணை

குருநகர் சனசமூக நிலையத்திற்கு முன்னால் ஆணின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை கமல் (வயது 35) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு அங்கு நடைபெற்ற இசைநிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பாத நிலையில், நேற்று அதிகாலை அயலவர்களால் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்....

வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்படும் – தேர்தல்கள் ஆணையாளர்

தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பு நிலையத்தினருகில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டால் குறித்த இடத்தின் வாக்கெடுப்பு உடன் ரத்துச் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வேட்பாளர்களின் பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறும்...

யாழ். பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் விடுதி வசதியின்றி சிரமங்களுடன் கல்வி கற்பதாக யாழ். மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் 600 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். அவர்களுக்கான விடுதி வசதிகள் போதாமல் உள்ளது....

யாழ். பொலிஸார் இருவர் கடமையில் இருந்து தற்காலிக இடைநிறுத்தம்

யாழ். பொலிஸ் நிலைய இரு பொலிஸார் கடமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சுஜிவன் மற்றும் சாயன் தென்னக்கோன் ஆகியோரே இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். யாழ். அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கண்காணிப்பதற்காக வெள்ளிக்கிழமை (31)...

அமெரிக்காவில் இடம்பெற்ற விசேட ஒலிம்பிக் போட்டியில் சிவபூமி மாணவர்கள் சாதனை

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்துகொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை...
Loading posts...

All posts loaded

No more posts