Ad Widget

சமஷ்டிக் கோரிக்கைக்கு மக்களாதரவு உள்ளதா என சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது! – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, எமது மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி...

மகிந்தவுக்கு படையினருக்கும் சர்வதேச நீதிமன்றில் தண்டனை பெற்றுக் கொடுப்போம்! – சிவாஜிலிங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினரும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட போரின் போது பாதுகாப்புப் படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களை படுகொலை செய்திருந்தனர். இந்த குற்றச் செயல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி...
Ad Widget

யாழில் ஐ.தே.க வேட்பாளர் அலுவலகம் மீது தாக்குதல்

சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்தியகலாநிதி சிவசங்கரின் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 02.30 அளவில் சுன்னாகம் கே.கே.எஸ் வீதியிலுள்ள குறித்த அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்து, பின் அதனைத் தூக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது....

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டியது அவசியம்! – ஆனந்த சங்கரி

தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தகைய அதிகாரங்களை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருக்கின்றது. ´´இத்தகைய அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எவரும் குறை கூற முடியாது. அதேநேரம் இவ்வாறு அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்படுவதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்´´ என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

தமிழர் தரப்பில் ஐக்கியம் இருந்தால் மட்டுமே நல்லதொரு தீர்வினை தமிழ் மக்களுக்கென பெற்றுக் கொள்ள முடியும் டக்ளஸ் தேவானந்தா

மத்திய அரசை சரியான முறையில் கையாண்டு அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற யாழ்.முகாமையாளர் மன்றம் 2015 பொதுத்...

தேச அங்கீகாரமே எமது திடமான நிலைப்பாடு-மணிவண்ணன்

எமக்கெதிராக பெரும்பான்னை அரசு தொடுக்கின்ற அடக்குமுறைகளை நாம் தடுக்க வேண்டுமானால் எமது தேசம் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கேள்வி நேரம் எனும் நிகழ்வில் தமது கட்சியின்...

வவுனியா பஸ் நிலையப்பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்

கடந்த 23.07.2015 அன்று வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கோமா...

யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமாகியது இந்து ஆராய்ச்சி மாநாடு

அகில இலங்கை இந்து மன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் இந்து ஆராய்ச்சி மாநாடு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நல்லை ஆதீன முதல்வர், இந்தியாவின் தர்மபுரி ஆதீன குருமுதல்வர் ஸ்ரீமத் மௌனகுமார தம்பிரான் சுவாமிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக பேராசிரியர் கோபால...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார். அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில்...

வல்வை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபொரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வல்வெட்டிதுறை நகரத்தில் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 02.08.2015 மாலை 4.30 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்கரையிலுள்ள ரேவடி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

தேநீர்க்கடையை உடைத்து உள்நுழைந்த பொலிசார் இரு பெண்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் !!

புத்தூர்- நவக்கிரி நிலாவரைச் சந்தியில் உள்ள தேநீர் கடையை உடைத்து உள்ளே நுழைந்த பொலிஸார் அங்கிருந்த இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த இழுபறியில் பெண்ணொருவரின் மேலாடை கிழிந்து மார்பகங்கள் வெளியே தெரிந்தது அதைப் பற்றிக் கவலைப்படாது பொலிசார் அட்டகாசம் செய்ததாக பிரதேசவாசிகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு சம்பவம்...

சூப்பர் சிங்கர் பாடகர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் வாக்கு வேட்டையாடும் சிங்களக் கட்சி!

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்தது, புலம் பெயர் தமிழர்கள் மற்றும், ஈழத்தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் காலூன்ற முனையும் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவோம்! -சம்பந்தன்

நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வடமாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில்,...

சத்தம் ஓய்ந்துவிட்டது யுத்தம் ஓயவில்லை : நல்லை ஆதீன முதல்வர்

வடக்கில் சத்தம் ஓய்ந்து விட்டது ஆனால் இன்னமும் யுத்தம் ஓயவில்லை என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். நேற்று இந்து ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையிலே, குண்டுகளின் சத்தம் வடக்கில் இருந்தும்,மக்கள் மனதில் இருந்தும் ஓய்ந்து விட்டது...

சுதந்திரக் கட்சி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில், சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான முத்துதுரை இந்திரராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (30) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போது மேற்படி வேட்பாளர் மல்லாகத்தில் இருந்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அழைத்து சென்றிருந்தார்....

ஐநாவுக்கான இலங்கை அரசின் ஆலோசனைகள் வெளியிடப்படும் – ரணில்

செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான இலங்கை அரசின் ஆலோசனைகள் வெளியிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கிறார். வட இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக...

3 பிள்ளைகளின் தந்தை கொலை

யாழ்., துன்னாலை, குடவத்தை பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர் வியாழக்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த பிரசாந்த் துரைசிங்கம் (வயது 33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரும் அவரது உறவினரும் மதுபோதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தகர்க்கம் முற்றியதையடுத்து உறவினர் கத்தியால் குத்தியுள்ளார். இதன்போது காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார...

குற்றவாளிகள், தம்மைத்தாமே விசாரிப்பதை த.தே.கூ ஏற்காது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

குற்றம் செய்தவர்களே தங்களை விசாரிக்கும் நடவடிக்கையை தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேபோல், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் உள்ளக விசாரணை நடத்தப்படுகின்றமையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ள ஐ.நா. போர்க்குற்ற விசாரணை...

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாகச் செயற்படுகிறார் கஜேந்திரகுமார் – மாவை. சேனாதிராஜா குற்றச்சாட்டு

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தால் எங்கள் இனம் அழிந்து போகும் எனத் தெரிந்தும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரவேண்டும் என்று கஜேந்திரகுமார் பிரசாரம் செய்கின்றார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்...

யாழ். யுவதியுடன் தங்கியிருந்த நபர் தொடர்பில் தகவல் தரவும்

கடந்த 29ஆம் திகதி புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணபொதியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பகின்றன. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறுகையில், "கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts