வேமாக பரவி வரும் வயிற்றோட்டம்: மக்களை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வயிற்றோட்டத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நோய் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநோய் தொற்றுக்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக சுட்டாறிய நீரை பருகுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன் பொதுமக்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்....

பொருத்தமான நேரத்தில் இலங்கை வருவேன்! – மைத்திரியின் அழைப்புக்கு இம்மானுவேல் பதில்

"உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன்." - இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், இன்று திங்கட்கிழமை வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். "இலங்கைக்கு வருகைதர முன்பாக என்னைப் பற்றியும் எமது செயற்பாடுகள் பற்றியும் முன்னைய மஹிந்த அரசினால்...
Ad Widget

யாழில் உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வடக்கில் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், நேற்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை...

இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை!

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை எனவும் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று மரம் நடும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

யாழில் புதிய சிறைச்சாலை திறந்துவைப்பு

'சிறைக்கைதிகளும் மனிதர்களே' என்ற தொனிப்பொருளின் கீழ் சிறைக்கைதிகளை உரிமைகள் மற்றும் சலுகைகளுடன் தடுத்து வைப்பதற்கு உகந்த சுற்றாடலுடனும் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய சிறைச்சாலை கட்டடத்தொகுதி சனிக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேரா தலைமையில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, சிறைச்சாலைக்கான புதிய கட்டடத்தினை...

திராட்சைகளை உட்கொள்ள வேண்டாம்

தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும்...

சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அவசர கடிதம்

"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை...

யாழ். நகர உணவகங்களில் பெரும் சுகாதார சீர்கேடுகள்! கண்டும் காணாமல் அதிகாரிகள்!!

யாழ். நகரில் இயங்கும் பல உணவகங்களிலும் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவினர் கண்டும் காணாதபோக்கில் செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ். புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுக்குள் தீக்குச்சி காணப்பட்டதுடன், இறைச்சியில் அகற்றப்படாத இறக்கையும் காணப்பட்டதாக...

பருத்தித்துறை பொலிஸ் நிலைய கட்டடம் திறந்து வைப்பு

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று காலை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அழைப்பின் பேரில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான, புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த...

2017ல் அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi

2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை...

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச் சுத்திகரிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை...

ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! – கருணா அம்மான்

“இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.'' - இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்...

சுன்னாகத்தில் நிலக்கீழ் நீரில் கழிவு ஒயில்: ஆராயப்படும் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த!

"யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் நிலக்கீழ் நீரில் கலந்துள்ள விடயம் தொடர்பில் கனிய எண்ணெய் அமைச்சினூடாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர்...

இலங்கையில் இணைய பாவனை சுதந்திரம் முன்னேற்றம்! – சர்வதேச அமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ப்ரீடம் ஹவுஸ் எனும் அமைப்பு சர்வதேச ரீதியான இணையத்தள பாவனை சுதந்திரம் பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டில் இலங்கையர்களுக்கு இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக...

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை! – எரிக் சொல்ஹெய்ம்

போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ம் திகதி நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நோர்வேயின்...

மகிந்த ஆட்சியில் இனஅழிப்பே நடந்தது! – வெளிவிவகார அமைச்சர்

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்...

சங்குப்பிட்டியில் சமூகச் சீர்கேடுகள்

கிளிநொச்சி, பூநகரி சங்குப்பிட்டிப் பாலப் பகுதியில் சமூகச்சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பிரதேச சபை இணைந்து செயற்படவேண்டும் என பூநகரி பிரதேச செயலர் சி.த.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார். இவ்விடயத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாக கூறினார். சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஒரு சுற்றுலா மையப்பகுதியாக மாறிவரும் நிலையில் சமூக சீர்கேடுகள் நிகழ்வதற்கான...

அரசியல் கைதிகளின் விடுதலையில் கடந்த கால உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை – சுரேஷ்

இலங்கையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் அனைத்தும் மீறப்பட்ட சூழ்நிலையே காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரத்தியேக நீதிமன்றங்களை அமைத்து அரசியல் கைதிகளின் விசாரணையை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்வதாக முன்னர் கூறியிருந்த போதிலும் அதற்கான சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அரசியல்...

இந்திய வீட்டுத் திட்டத்தில் 40,000 வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன – விக்னேஸ்வரன்

இந்திய வீட்டு திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் மாத்திரமே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் தட்சனா மருதமரு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் நடமாடும்...

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை; மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் மழை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்தால், யாழ். பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மக்கள் முழுமையாக இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு...
Loading posts...

All posts loaded

No more posts