Ad Widget

யாழில் உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வடக்கில் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், நேற்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் நடத்தியதாகவும் சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNDA-ATI- 1

HNDA-ATI- 2

Related Posts