- Sunday
- April 26th, 2026
நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சுந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை...
பருத்தித்துறை, மணற்காடு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரச தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் தோண்ட முற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வரையும் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதி...
தமிழ்நாட்டில் உள்ள அகதிகளில் இலங்கை தமிழ் அகதிகள் 42 பேர், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇலங்கையை வந்தடையவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உதவ காத்திருக்கின்றார்கள், எனவே, இந்த நாட்டில் நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதி...
சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 572 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 273 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி...
தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் நாட்டின் ஹெல்ப் 4 சிமைல் (Help for Smile) என்ற புலம்பெயர் தமிழர்களது அமைப்பின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களுக்கு ஹெல்ப் 4 சிமைல் (Help for Smile)...
இண்டந்நெட் மூலம் உலக வாசிகளை மிகவும் எளிமையாக இணைத்த பெருமை கொண்ட சமூக வலைதளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது என்றே கூறலாம். தகவல் பறிமாற்றத்திற்கு வழி செய்வதில் துவங்கி இணையவாசிகளுக்கு இன்று பல்வேறு அற்புத சேவைகளை ஃபேஸ்புக் வழங்கி வருகின்றது. மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சேவைகளில் துவங்கி இன்றைய இளைஞர்களை குளிர வைக்கும் புதிய சேவையை...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் முதற்கட்ட குழுவினர் தொடர்பாக சட்டமா அதிபர் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால்...
சந்திரனை சுற்றி பல வர்ணங்களுடன் வெளிச்சமான வளையங்கள் தோற்றுவதன் ஊடாக எதிர்வரும் நாட்களில் புயலுடன் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றும் என நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன எதிர்வு கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வானவில்லைப் போன்று சந்திரனைச் சுற்றி தோன்றியிருந்த வளையங்களை கடந்த சில நாட்களாக இரவு வானில்...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் பெயர்குறிக்கப்பட்டிருந்த அமைப்புகளில், எட்டு அமைப்புகள் மற்றும் 269 பேரை அப்பட்டியலிலிருந்து, பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது. இது குறித்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 296 பேரின் விவரம் பின்வருமாறு: 01.மேரி ஜோசப் வின்சிப் பெல்ஜியம் பளை 02.செல்லத்துரை சந்திரதாஸன்...
புதிதாக நிர்மானிக்கப்பட்டுவந்த யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கான கட்டிடம் நேற்று(22) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியை பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல திறந்துவைத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான்.டீ சில்வா,பல்கலைக்கழக மானியங்கள்...
நேற்று (22) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அமெரிக்காவின் ஐ.நா விற்கான வதிவிட பிரதிநிதி சமந்தாபவர் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்டுவந்த விஞ்ஞான ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார். அமெரிக்க அரசின் 4லட்சத்து ஐம்பதாயிரம் டொலர் நிதியுதவியில் நிர்மானிக்கப்பட்டுவந்த இக்கட்டிடத்தை திறந்து வைத்த அவர் அங்கு ஏற்பாடபகியிருந்த எல்லே விளையாட்டு போட்டியையும் ஆரம்பித்து வைத்தார். கடுமையான மழைபெய்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாத...
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் பின்னர்...
புதிய வரி மாற்றங்களுக்கு அமைய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி மதுபானங்களின் விலைகள் 120 ரூபா முதல் 150 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பியர் ஒரு போத்தலின் விலை 30 ரூபா முதல் 40 ருபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக...
தற்போது சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் மீள்குடியேற்ற மாவட்டம் என்பதன் காரணமாக வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட குழிகளில் மழைவெள்ளம் தற்போது தேங்கிநிற்கின்றது. 'இக்குழிகளில் சிறுவர்கள் தவறிவிழுகின்ற அபாயநிலை உள்ளதால் பெற்றோர்கள் வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு தமது பிள்ளைகளை செல்லவிடாது...
பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்சமயம் 7 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்தம் 2,500 ரூபாவைப் பெற்றுவருவதாகவும் அதை 4 ஆயிரமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் தற்சமயம் 5 ஆயிரம்...
'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நயினாதீவின் சில பகுதிகள்...
யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள ஊர்காவல்துறை, நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைத்தீவு, மண்டைத்தீவு மக்கள் வாழும் தீவுப் பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத் தீவுகளில் சுமார் 15 000 குடும்பங்கள் வசிக்கின்றன. அக்குடும்பங்களில் சுமார் 75 சதவீதமானர்கள் கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள் போன்றவற்றை தமது...
Loading posts...
All posts loaded
No more posts
