Ad Widget

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் விஜய் நற்பணி மன்றம் உதவி

யாழ் விஜய் நற்பணி மன்றம், யாழ் வர்த்தகர்கள் எற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள்,குடிநீர் மற்றும் ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21437ஆக உயர்ந்துள்ளது.இதனால் மக்கள் மீளவும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் நாவந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பபட்ட மக்களுக்கு விஜய் நற்பணி மன்றத்தால் உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன.

இது அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

jaffna-vijay-fance-3

jaffna-vijay-fance-2

jaffna-vijay-fance-1

Related Posts