யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விடுதலை புலிகளின் புகழ்பாடும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகளில் மறவர் படையின் புனித நாள், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம், மாவீரர் நாள் விளக்கு எரியும் போன்ற விடுதலை புலிகளின் புகழ்பாடும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

யாழில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் விநியோகம்

யாழ் மாவட்டத்தில் வளலாய், வசாவிளான், தெல்லிப்பளை பிரதேசங்களில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சால் மறுவயற்பயிர் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும், மறுவயற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடனும் நிலக்கடலை, பயறு, உழுந்து ஆகிய மறுவயற்பயிர் விதைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. நேற்று திங்கட்கிழமை (23.11.2015)...
Ad Widget

திருகோணமலை இரகசியத் தடுப்பு முகாம்- 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது?

திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பாக 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின்...

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் மன்றில் மன்றாட்டம்

நாங்கள் குற்றம் செய்யவில்லை. எங்களை விடுதலை செய்யுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றுஞ திங்கட்கிழமை (23) மன்றாட்டமாகக் கேட்டக்கொண்டனர். கொலை செய்தீர்கள் என்பதற்கு அப்பால், கொலையுடன் தொடர்புபட்டுள்ளீர்களா என்ற ரீதியிலும் விசாரணைகள் இடம்பெறும் என நீதவான் செல்வநாயகம் லெனிக்குமார் இதன்போது கூறினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....

கொக்குவில் இந்துவின் முன்மாதிரியான செயற்பாடு!!

மாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் குறித்து பெற்றோர் வீடுகளில் இருந்தவாறே அறிந்துகொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் முறையொன்றை கொக்குவில் இந்துக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு மாணவர் சார்பாக பதிவு பெயர் மற்றும் கடவுச்சொல் என்பன வழங்கப்படும். அதனைக் கொண்டு, பாடசாலையின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் பிள்ளை அன்றைய தினம் பாடசாலைக்கு சென்றுள்ளாரா? என்பதை...

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு

இந்திய மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்திய கடலோரபாதுகாப்பு குழுமத்தின் கடலோர பொலிஸ், வழக்குத்தாக்கல் செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் ஆழ்கடலில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியன்று மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘புகை’ கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டும்

புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை...

ரயில் சேவைகள் இரத்து

ராகம ரயில் நிலையத்தில் வைத்து ரயில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. ராகம ரயில் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாகவே இந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக்வும் – தவராசா

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித்...

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியை சேர்ந்த கைலாயபிள்ளை குடும்பத்தினரால் தமது குடும்ப அங்கத்தவர்கள் நினைவாக வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் மயில்வாகனம் விமலாதரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிகழ்வில் பாடசாலையின் உபஅதிபர்,...

வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் கல்வியை தொடரும் சிறார்கள்

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகததுக்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். யாழ். ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள், கழிவுகள்...

நிலையான நல்லிணக்கத்திற்கான அரசின் அர்ப்பணிப்பு தெளிவானது! – சமந்தா

"இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு தெளிவானது." - இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது!

நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்பார்ப்புடன் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தொழிலுக்கேற்ப தொழிற் கல்வி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...

தமிழர்களுக்கு அமெரிக்கா ‘100 சதவீத ஆதரவு’ – சமந்தா தெரிவித்ததாக சம்பந்தன்

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் உறுதியளித்தார் என சம்பந்தன் தெரிவித்தார். ஐ நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திரப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்தரப்பினரை சந்தித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமந்தா பவரை சந்தித்து பேசினர். அச்சந்திப்பில் போருக்கு பின்னரான...

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்

கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்தியா, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. நடுக்கடலில் வைத்து இந்திய மீனவர்களை கற்களால் அடித்து இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள், இராமேஸ்வரம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையாளர் தென்மராட்சிக்கு விஜயம்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (22) விஜயம்மேற்கொண்டதுடன் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டார். பாடசாலையின் அதிபர் திருமதி வசந்தாதேவி மேகலிங்கம் ஓய்வுபெறுவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கௌரவிப்பு விழாவை நடத்தியிருந்தனர். இந்நிகழ்வுக்கு எதிர்பாராதவிதமாக மஹிந்த தேசப்பிரிய வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட...

புகை பரிசோதனை கட்டணம் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே

நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து...

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சுந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை...

புலிகளின் புதையலை தோண்ட முற்பட்டோருக்கு தடுப்புக் காவல்

பருத்தித்துறை, மணற்காடு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரச தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் தோண்ட முற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வரையும் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதி...

தமிழ்நாட்டில் உள்ள 42 அகதிகள் நாளை நாடு திரும்புவர்

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளில் இலங்கை தமிழ் அகதிகள் 42 பேர், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇலங்கையை வந்தடையவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத...
Loading posts...

All posts loaded

No more posts