Ad Widget

கடற்படை பஸ் மோதி மாணவி பலி

வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கடற்படையினரின் பஸ் மோதி, மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

வேலணை நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதி, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts