Ad Widget

கூட்டமைப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கூட்டங்களை நடத்தியிருந்தனர்.

அங்கு அவர்கள் தெரிவித்த கருத்துகள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தங்களிடம் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரின் உதவி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts