Ad Widget

4 பசுக்கள் நசுங்கிப் பலி

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.

இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஓட்டு மடம் பகுதியினூடாக பேருந்து சேவையிலீடுபடும் போக்குவரத்து வீதியில் நேற்று காலை சுமார் பத்திற்கு மேற்பட்ட மாடுகள் படுத்திருந்துள்ளன. குறித்த வீதி எவ்வித வளைவுகளும் இல்லாது நேராக காணப்பட்ட போதிலும் வீதியில் படுத்திருந்த பசுமாடுகளை கவனிக்காத சாரதி அவற்றின் மீது பேருந்தை ஏற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பசு மாடுகள் மீது பேருந்தை ஏற்றி அவை உயிரிழக்க காரணமான சாரதி பேருந்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

உயிரிழந்த பசுமாடுகள் நேற்று மதியம் வரை புதைக்கப்படாமல் அவ்விடத்திலேயே காணப்பட்டன. மேலும் பசுக்கள் மீது பேருந்தின் சக்கரங்கள் எறியமையால் குடல்கள் வெளித் தள்ளி அகோரமாக காணப்பட்டன.

Related Posts