Ad Widget

உயர் பதவிகளுக்கு தமிழர் நியமிக்கப்படவேண்டும் – சித்தார்த்தன்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உடபட உயர் பதவிகளுக்கு தமிழர்களை நியமிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (04) பாராளுமன்றில் தெரிவித்தார்.

சட்டம ஒழுங்கு அமைச்சின் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பல்வேறு குற்றச்சம்பவங்களின் போது பொலிஸார் அசிரத்தையுடன் நடப்பதாக மக்கள் நம்புகின்றனர். வடக்கில் பணியாற்றும் பொலிஸாருக்கு மொழி பிரச்சினை காணப்படுகிறது. தமிழ் பொலிஸாரின் பதவி உயர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts