- Friday
- November 21st, 2025
கடந்தகால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்ததும் உரிமை அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அதற்கென ஒரு பொதுவான தினத்தைப் பிரகடனப்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த கால யுத்தத்தால் உயிரிழந்த...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று 61 ஆவது பிறந்தநாள். இந்நிலையில், அவரை வாழ்த்தி வடக்கின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிரித்த முகத்துடன் பிரபாகரனின் உருவப்படம் காணப்படும் இந்தச் சுவரொட்டிகளில், 'தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்க!', 'தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தலைவர் வாழ்க!!' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தமிழீழ...
இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம்...
உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (26) முதல் ஆரம்பமாகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும்...
இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்பொன்றிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதானது சட்டவிரோத செயல் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை தற்பொழுது காணக்கூடியதாக உள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளது. இதேவேளை...
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூலம் இறக்குமதி மதுபானம் மீது குறைக்கப்பட்ட வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 5%க்கு குறைவான அற்ககோல் கலந்துள்ள இறக்குமதி மதுபானத்திற்கான வரி இம்முறை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுபான இறக்குமதியின் போது நிலவிய வரி சமத்துவமின்மையை...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான அடிக்கல்லை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (24.11.2015) நாட்டி வைத்துள்ளார். விதைப்புச் செய்யவேண்டிய விதைகளுடன் முளைதிறனற்ற விதைகள், வேறு பயிரினங்களின் விதைகள், களை விதைகள் போன்றவையும் கலந்திருப்பதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக்...
மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. “இன்னும் எங்களுடன் சிகிச்சை உண்டு” எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுகாதார கல்வி பணியகத்தில் செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக...
கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து வந்த 7 குடும்பங்களை அந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். அரசுக்குச் சொந்தமான காணிகளில் இந்தக் குடும்பங்கள் அடாத்தாகக் குடியேறியிருப்பதாகத் தெரிவித்து, அரச காணிகள் மீளப் பறித்தல் சட்டத்தின் கீழ்,...
தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு...
நாட்டின் வட,வடமத்திய, கிழக்கு ஊவா மாகாணங்களில் இன்று (25) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது என அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால்...
கனடாவின் ரொரன்டோவிலுள்ள முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றான கந்தசாமி ஆலயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய...
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பயனாளிகள் அதிகாரிகளின் முறைக்கேடுகளுக்கும், உதாசீனங்களுக்கும் ஆளாகிவருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.எனவே, இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 சிங்களவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இவர்களுக்கு பாகுபாடின்றி அரச சேவை வழங்கப்படுகின்றது என்றும் கூறிய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல...
நாம் ஏனையவர்களின் கைகளை எதிர்ப்பதை விட எமக்கான செல்வத்தை அள்ளித்தரக்கூடிய பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் வருவாயைப் பெற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள இத்தாவில் ஆயுர்வேத வைத்தியசலை மற்றும் உப அலுவலகத்தின் திறப்பு விழா, நேற்று திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்ற போது, அதில்...
யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இணையத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் சொர்ணாம்பிகை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் எதிர்கால முன்நோக்கிய நகர்வு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் அரசசார்பற்ற...
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஒரே பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றும் கிராம சேவகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றும் கிராம சேவகர்களில் பலர் 2016ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்ற அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். ஆரம்பகட்ட பணிகள்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புகள் மீதான தடையை நீக்கியமை போன்ற காரணிகளால் வடக்கு கிழக்கில் புலிக்கொடி ஏற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹக்மன லொல்பே ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ‘தமிழீழ விடுதலைப்...
Loading posts...
All posts loaded
No more posts
