- Friday
- November 21st, 2025
வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். நேற்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை...
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமானது ‘எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பெப்ரவரி...
அண்மையில் சென்னையிலும் தமிழகத்தின் வேறு பல பகுதிகளிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் பல வடமராட்சி கரையோரங்களில் கரையொதுங்கி வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கதவுகள், மற்றும் இலகுவாக மிதக்கக்கூடிய பொருட்களே இவ்வாறு அதிகளவில் கரையொதுங்குகின்றன. இதனால் வடடமராட்சியின் கரையோரங்களில் அதிகளவு குப்பைகள் தேங்கியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, குறித்த மாவட்டத்துக்கான போக்குவரத்துகள் சீர்குலைந்துள்ளன. கிளிநொச்சி மேற்குக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், கோணாவிலின் தாமரைக்குளம், அக்கராயன்குளம், அக்கராயன் பாலங்குளம், வன்னேரிக்குளம் ஆகிய குளங்களிலிருந்து பாய்கின்ற வான் வெள்ளங்களைக் கடந்தே முழங்காவில் வரை பயணிக்க வேண்டியுள்ளன. பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து வேரவில் செல்லும் பஸ்களும் மழைவெள்ளம் வீதிக்கு குறுக்காக...
"விடுதலைப்புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது'' என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன், இதை இராணுவம் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றதா என்றும் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...
எல்லை நிர்ணயம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொகுதிவாரி முறையில் நடத்துவதில் சிக்கல் உள்ளமையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது. அதேவேளை, எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் 700 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எல்லை நிர்ணயம்...
"தொழிலுக்காக கடன் எடுத்து அதை மீளச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வடக்கு மீனவர்களின் கடன்களை இரத்துச் செய்யவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பியான மாவை சேனாதிராஜா. "இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் நினைத்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தலாம். இதற்கான வலியுறுத்தலை இலங்கை அரசு செய்யவேண்டும். இந்த விடயம் தொடர்பாக...
இலஞ்ச, ஊழலுக்கு எதிரான நிகழ்வுகளை கடந்த அரசு நடத்தத் தவறியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச இலஞ்ச, ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழுப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசு (மஹிந்த அரசு) ஊழலுடன் செயற்பட்டமையினாலேயே இவ்வாறான நிகழ்வுகளை கடந்த காலங்களில் ஏற்பாடு செய்ய...
சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து நேற்று பிற்பகல் மன்னாருக்கு வந்தார் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப்புக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று புதன்கிழமை காலை அவர் பண்டாரநாயக்க விமான வந்தடைந்தார். அங்கிருந்து...
மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கிய முறை தொடர்பில் மாகாண முதமைச்சர்கள் தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர். இதன்படி கடந்த திங்கள்கிழமை இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மாகாண...
குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் CCH நிறுவனமானது KNH இன் அனுசரணையுடன் பெண்கள் வன் முறைக்கெதிரான ஊர்வலத்தினை 09.12.2015 இன்று மேற்கொண்டனர். நவம்பர் 25 ஆம் திகதிதொடக்கம் டிசெம்பர் 10 திகதி வரையான காலப்பகுதியினை ORANGE THE WORLD பெண்கள் வன்முறைக்கெதிரான வாரமாக ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நடைபெற்ற ஊர்வலமானது ORANGE...
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட்டிலேயே வங்கித் துறை பாதாளத்தை நோக்கிச் செல்வதாகக் கூறி இன்று மதியம் 12.30 மணிக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். ஏராளமான வங்கி ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். “அரச ஊழியர்களின் ஓய்வூதியக் கத்தரிப்பை நிறுத்து”, “EPF- ETF நிதிகள் ஆபத்தில் –...
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக...
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து...
எனது மகள் இருக்கின்றார் என்பதை ஆதாரத்துடன் காண்பித்தும் எனது மகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் மீட்டுத்தரவில்லை என காணாமற்போன பாடசாலை மாணவியொருவரின் தாயார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் எனது மகள் இருக்கும் படம் உள்ளது. அந்த துண்டுப்பிரசுரத்துடன்,பலத்தரப்பிடம்...
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மிதப்பதாக கூறப்பட்ட சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி கடற்படையினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். நேற்றையதினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கைகளை நூறு வீதம் பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்...
மணற்காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய விவகாரத்தில் தொடர்புடைய தென்பகுதி நடிகை உள்ளிட்ட மூவரையும் உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கும் சிங்கள நடிகையொருவர், சட்டத்தரணியொருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய மூவரையுமே இவ்வாறு கைது செய்யுமாறு நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மனற்காட்டுப்பகுதியில் விடுதலைப்பபுலிகளால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வமமாகாண முதலமைச்சரிடம் வழங்குமாறு...
வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, மேல், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடி மின்னல்...
சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில்...
Loading posts...
All posts loaded
No more posts
