அரசதுறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவில் 2500 ரூபா எதிர்வரும் ஜனவரி முதல் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவுசெலவுத்திட்ட இறுதியுரையில் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவுசெலவுத்திட்ட சமர்ப்பிப்பின் பின்னர் இடம்பெற்ற குழுநிலை விவாதங்களின் போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி 35,500 மில்லியன் ரூபாய்கள் மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.