Ad Widget

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (22) காலை 10.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இச் செயலமர்வில் சுமார் 100 சிறுவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் இச்செயலமர்வின் வளவாளர்களாக UNDP திட்ட ஆலோசகர் திரு.இ.சர்வானந்தன் மற்றும் சாந்திகம் நிலைய திட்ட அலுவலர் திரு.எஸ்.முகுந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts